Pages

Tuesday, 19 November 2019

#கர்மா_வலியது

#கர்மா_வலியது.

மறைந்த பிரதமர் இந்திராவால்
சஞ்சய்காந்திக்கு அரசியல்வாதியாகப் பயிற்சி கொடுக்கப்பட்டது.
ராஜீவ்காந்திக்கு விமானியாகப் 
பயிற்சி கொடுக்கப்பட்டது...

ஆனால்...
ராஜீவ்காந்தி அரசியல்வாதியாகிப் பிரதமரும் ஆனார்.
சஞ்சய்காந்தியோ விமானவிபத்தில் மாண்டுபோனார்...

ஜெயலலிதா சிறைக்கு போகனும்னு கருணாநிதியும்....
கருணாநிதி சாகணும்னு ஜெயலலிதாவும் நினைத்தார்கள்...

கருணாநிதி விருப்பப்படி
ஜெயலலிதா சிறைசென்றபோது 
அதை உணரும் நிலையில் 
கருணாநிதி இல்லை.

ஜெயலலிதா விருப்பப்படி
கருணாநிதி  இறந்த போது ஜெயலலிதாவே உயிருடன் இல்லை.

ஸ்டாலினும் சசிகலாவும் 
30 வருசமா முதல்வர் கனவில்
இருக்குறாங்க... 
ஆனால்...
ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும்
முதல்வர் ஆகி கலக்குறாங்க..

ஈவேரா விநாயகர் சிலையை 
கல் என கூறி தூக்கி ஏறிந்தார்... 
ஆனால்... 
தனது சிறுநீரகத்தில் உருவான 
கல்லை கூட தூக்கி எறிய முடியாமல் 
மூத்திர வாளியோடு சுற்றித்திரிந்தார்...

மெத்த படித்த மன்மோகன் சிங், சோனியாவின் கருத்துக்கு பொம்மையாய் ஆடினார் ... . 
ஆனால்...
ஏதோ படித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு இந்த உலகமே ஆடுகிறது...

கர்மாவானது உங்களுக்கு எதிராக என்றைக்கும் வினையாற்றுவதில்லை... 

ஆனால்..
உங்கள் செயல்களுக்கு எதிர்வினையாற்றத் 
தவறுவதே இல்லை.

நீ ஆசைப்படலாம் 
தேர்தல்ல நின்னு 
எம்எல்ஏ ஆயிடலாம்னு.
ஆனால் வேட்புமனு 
தாக்கல்செய்யும்
நேரம் பார்த்து 
உனக்கு ஓட்டு இருக்காது..

ஆனால்.. 
ஓட்டுபோடும் நேரத்தில் 
உனக்கு ஓட்டு இருக்கும்.

இந்தப் அரசியலே வேண்டாம்
நாமபாட்டுக்குக் குடும்பம் குட்டியைப்
பாக்கலாம்னு நீ நினைக்கலாம்.
ஆனால்
உன்னைக் கூப்பிட்டுத்தான்
திரும்பத் திரும்பப் பதவியைக் கொடுத்து அழகு பார்ப்பாங்க மக்கள்..

உங்கள் செயல்களுக்கான பலனை ஏதோ ஒரு வடிவில் உங்களிடமே 
சேர்த்து விடும் மிகச்சிறந்த நிர்வாகிதான் கர்மா.

கேடு செய்ய யாருக்கு நினைக்கிறோமோ ...
அதே கேடு நமக்கே வந்துசேரும்.

கொஞ்ச நாள் வாழும் வாழ்க்கையில் 
நன்மையை மட்டுமே விதைப்போம்.
நல்லவர்களாகவே வாழ்வோம்.

பாவமன்னிப்பு' என்ற மதச்சடங்கு, 
இந்து மதத்தில் இல்லாதது 
ஏன் தெரியுமா?

பாவங்கள் மன்னிக்கப்படுமானால், பாவிகள், தைரியசாலிகள் ஆகிவிடுவர்.
இந்துமதம் பாவத்தின் அளவு எவ்வளவோ அந்த அளவுக்கேற்ப தண்டனையை விதிக்கிறது; 
பாவம் உணரப்படும் போது, 
குறைந்தபட்ச தண்டனை 
கொடுத்து மன்னிக்கிறது.

ஆனால், அப்படி ஒரு மன்னிப்பை வழங்குவதற்கு இங்கே யாரும் நியமிக்கப்படவில்லை.

இந்த விஷயங்களை நேரடியாக இறைவனே கவனிக்கிறான்.

#கர்மா_வலியது ..

No comments:

Post a Comment