Pages

Thursday, 29 January 2015

அம்பிகை அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்

ரட்ச ரட்ச ஜகன் மாதா சர்வ சக்தி ஜெய துர்கா
ரட்ச ரட்ச ஜகன் மாதா சர்வ சக்தி ஜெய துர்கா
மங்கள வாரம் சொல்லிட வேண்டும் மங்கள கன்னிகை ஸ்லோகம் இதை ஒன்பது வாரம் சொல்லுவதாலே உமையவள் திருவருள் சேரும்.
படைப்பவள் அவளே காப்பவள் அவளே அழிப்பவள் அவளே சக்திஅபயம்
என்று அவளை சரண் புகுந்தாலே அடைக்கலம் அவளே சக்தி ஜயஜயசங்கரி கவுரி மனோகரி அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி
சிவ சிவ சங்கரி சக்தி மகேஸ்வரி திருவருள் தருவாள் தேவி
கருணையில் கங்கை கண்ணனின் கங்கை கடைக்கண் திறந்தால் போதும் வருவினை தீரும், பழவினை ஓடும் அருள் மழை பொழிபவள் -நாளும் நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள் காளி எனத் திரிசூலம் எடுத்தவள் பக்தருக்கெல்லாம் பாதை கொடுத்தவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்.


No comments:

Post a Comment