Friday 22 March 2019

5 வருஷத்தில் #மோடி யின் 183 திட்டங்கள் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள் எதிரிகள்

5 வருஷத்தில் மோடியின் 183 திட்டங்கள் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள் எதிரிகள்
___________

இதே போல் கடந்த 60 வருடம் இந்த தேசத்தை ஆண்டவர்கள் தங்கள் பட்டியலைத் தரட்டும். இந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்து பார்த்து விடுவோம்..! ❤❤

📍1. தமிழக மீனவர் சுடப்படவில்லை,
📍2. இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் இல்லை,
📍3. ஆளில்லாத ரயில்வே கேட் இல்லை,
📍4. மின்சாரம் இல்லாத கிராமம் இல்லை,
📍5. 16 மணி நேர மின் தடை இல்லவே இல்லை,
📍6. 5 வருடமாக ஊழல் இல்லை,
📍7. விலைவாசி உயர்வு இல்லை,
📍8. 17 விதமான வரிகள் இல்லை,
📍9. போலி சிலிண்டர் இல்லை,
📍10. போலி ஆசிரியர்கள் இல்லை, இன்னும் பல இல்லைகள்
📍11. நக்சல் தொந்தரவு குறைந்தது,
📍12. தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லை தாண்டுவதற்கு உயிருடன் இல்லை,
📍13. ரயில் விபத்துக்கள் குறைவு,
📍14.சாலைகள் அமைப்பது வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு,
📍15. நீர்வழி சாலைகள் அமைப்பு,
📍16.கங்கை சுத்தமானது,
📍17. கும்ப மேளா அருமையாக நெரிசல் இல்லாமல் நடக்கிறது,
📍18. பாக்கிஸ்தான் பணத்துக்கு பல நாடுகளிடம் கையேந்துகிறது,
📍19. வீடு கட்ட கடன் சுலபமாக குறைந்த வட்டியில் கிடைக்கிறது,
📍20 மருந்துகள் விலை மிக  குறைவு,
📍21. இதய வால்வு, செயற்கை மூட்டு போன்றவை விலை மிக குறைவு, 📍22. மருத்துவ காப்பீடு 5 லட்சத்திற்கு,
📍23. 5+4.5 லட்சம் வரை வருமான வரி இல்லை,
📍24. பயிர் காப்பீடு, பயிர்களுக்கான குறைந்த பட்ச விலை 1.5 மடங்காக அதிகரிப்பு,
📍25. இதுவரை இல்லாத அளவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த வட கிழக்கு மாநிலங்களுக்கு விமான மற்றும் நெடுச்சாலை இணைப்புகள்,
📍26. தமிழ்நாட்டுக்கு AIIMS, மற்றும்
📍27.  நாடு முழுவதும்,. பல புதிய IIT மற்றும்  IIM கள்,
📍28. கோதாவரி- காவிரி இணைப்பு,
📍29. காவிரி ஆணையம் அமைப்பு,
📍30. பெரியாறு அணை நீர் இருப்பு உயரம் அதிகரிப்பு,
📍31. 2 ஆண்டுகளில் APJ கலாமுக்கு நினைவிடம் அமைப்பு,
📍32. முகம் தெரியாத பலருக்கு பத்ம விருதுகள்,
📍33. கந்து வட்டியில் இருந்து விடுபட வங்கியில் மூன்ற  கடன் திட்டங்கள்,
📍34. மோடியின் தொகுதியான காசியின் சுத்தம்,
📍35. அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின்  உயர்வை கட்டுக்குள் வைத்து இருப்பது,
📍36. இந்திய ரூபாயில் வெளிநாடுகளுடன் கச்சா எண்ணெய் வணிகம்,
📍37. வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பு,
📍38. உலகத்தின் 5 வது பெரிய பொருளாதரமாக வளர்ச்சி,
📍39. ஊழல் நாடுகள் பட்டியலில் முன்னேற்றம்,
📍40. தொழில் செய்ய உகந்த நாடுகள் பட்டியலில் முன்னேற்றம்,
📍41. GDP கிட்ட தட்ட 8 சதவீதம்,
📍42. OROP அமல்படுத்தியது,
📍43. பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்து இருப்பது,
📍44. அனைத்து ஊழல் வாதிகளையும் ஒன்று சேர்த்து இருப்பது,
📍45. ஆயுத பேரத்தில் இடைத்தரகர்களை ஒழித்தது,
📍46. உள்நாட்டில் ஆயுத, ராணுவ தளவாட உற்பத்தியை ஊக்குவிப்பது,
📍47. இடைத்தரகர்களை நாடு கடத்தி கொண்டு வருவது,
📍48. ஸ்விஸ் வங்கியில் விபரங்களை பெற்றது,
📍49. தினமும் 18 முதல்  20 மணி நேரம் உழைப்பது,
📍50. தமிழ்நாட்டுக்கு Defence corridor அமைத்து கொடுப்பது,
📍51. 8 வழி சாலை,
📍52. அனைத்து நாடுகளிடமும் நட்பு பாராட்டுவது,
📍53. இலங்கை தமிழ் பகுதிக்கு சென்றது,
📍54. அங்கே ஆட்சி மாற்றம் ஏற்படச் செய்தது,
📍55. இலங்கை தமிழர்க்கு வீடு கட்டி கொடுத்தது,
📍56. கள்ள நோட்டை ஒழித்தது,
📍57. NEET மூலம் ஏழையும் மருத்துவம் படிக்க வழி செய்தது,
📍58. GST   மூலம் விலைவாசி கட்டுக்குள் வைத்து
📍59. நோ.2 வியாபாரத்தை படி படியாக ஒழித்து வருவது,
📍60. பணமதிப்பு இழப்பு  கொண்டு வந்தது,
📍61. ஏழைகளுக்கு 10 %இட ஒதுக்கீடு
📍62. ராணுவத்துக்கு நவீன தளவாடங்கள்,
📍63. குண்டு துளைக்காத ஆடைகள்,
📍64. புதிய ஹெலிகாப்டர்கள்,
📍65. புதிய விமானங்கள்,
📍66. ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள்,
📍67. குண்டு துளைக்காத தலை கவசங்கள்,
📍68. ரயில் 18, 180 km வேகத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரயில்,
📍69. ஜப்பான் உடன்  இணைந்து புல்லட் ரயில் திட்டம்,
📍70. அனைவருக்கும் இன்டர்நெட் இணைப்பு, கிராமங்கள் வரை,
📍71. பல பாலங்கள் மற்றும் குகை பாதைகள் மூலம் நேர, பண விரையம் தவிர்ப்பு,
📍72. மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் நீக்கம்
📍73. இதனால் லஞ்சம் தவிர்ப்பு,
📍74. நாட்கணக்கில் தாமதம் தவிர்ப்பு,
📍75. ஓட்டுனர்களுக்கு வருடத்திற்கு 100 நாள் சேமிப்பு,
📍76. தேய்மானம் குறைவு,எரிபொருள் சேமிப்பு,
📍77.  28 % GST இல் 10 க்கும் குறைவான பொருட்கள்,
📍78. அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் 12 % உள்,
📍79. 5 கோடிக்கும் அதிகமான எரிவாயு இணைப்புகள்,
📍80. அனைத்து அரசாங்க உதவியும்  நேரடியாக வங்கியில் செலுத்துவதால் பல ஆயிரம் கோடி சேமிப்பு,
📍81. பங்கு சந்தை உயர்வு,
📍82. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கிட்ட தட்ட 100 % கழிப்பறை வசதி
📍83. மக்களின் சுகாதாரம் மேம்பட்டது,நோய்கள் குறைந்தது,
📍84. காஷ்மீரில் மாவட்டங்கள் தீவிரவாதம் இல்லா மாவட்டமாக அறிவிக்கப்பட்டது
📍85. எதிர் கட்சியின் முலாயம் சிங் மீண்டும் மோடியின் ஆட்சி வேண்டும் பாராட்டினார், பல பன்னாட்டு அமைப்புகளும் ,உலக தலைவர்களும் ,பல உள்நாட்டு நற்பெயர் கொண்ட தொழில் அமைப்புகளின் தலைவர்களும் மீண்டும் மோடியின் ஆட்சி வர வேண்டும் என்றுதான் சொல்கின்றனர்
📍86. Insolvency சட்டத்தில் மாற்றம் மூலம் பல பெரிய கடன்கள் வசூல்,
📍87. இலங்கையில் தூக்கில் இருந்து தமிழக மீனவர்கள் மீட்பு
📍88. வெளியுறவு துறை மூலம் பல நன்மைகள்,அப்படி ஒரு துறையில் இப்படி எல்லாம் செயல்படமுடியும் என்று காட்டினார்கள்
📍89. பல வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பல வகையில் எதிர்பாராத மீட்பு பணிகள்,பாஸ்போர்ட் சேவைகள்,விசா சேவைகள்,இன்னல்களில் இருந்த்து மீட்பு
📍90. பாஸ்போர்ட் வாங்கும் வழிகள் எளித்தாக்கப்பட்டது
📍91. விண்வெளி இஸ்ரோ மூலம் பல செயற்கை கோள்கள் ஏவப்பட்டது
📍92. இந்தியாவின் எல்லைகள் எப்போதும் கண்காணிக்கப்பட்டது
📍93. இந்தியா எல்லையில் ஊடுருவலை தடுக்க நவீன கண்காணிப்பு வேலிகள் அமைப்பு
📍94. பங்களாதேஷ் உடனான பல ஆண்டு எல்லை பிரச்சனைக்கு தீர்வு
📍95. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்தால் மற்ற தென் மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பாதிப்பு என்று கொடுக்க மறுத்து கூட்டணியை இழந்தது
📍96. சீனாவை விட அந்நிய முதலீட்டில் முன்னணி வகிப்பது
📍97. தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் ஸ்மார்ட் நகரங்கள்
📍98. தமிழ்நாட்டுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு
📍99. 18 % இருந்த உணவக வரியை 5% ஆக்கியது
📍100. காங்கிரஸ் வாங்கிய கடனை வட்டியுடன் 200000  கோடி திருப்பி செலுத்தியது
📍101. சிறு குறு விவசாயிகளுக்கு  வருடம் 6000  ரூபாய்  உதவித்தொகை
📍102 .கணக்கு காண்பிக்காத 20,000  NGO  உரிமங்கள் ரத்து
📍103. லட்சக்கணக்கான ஷெல் கம்பெனிகள் அழிப்பு
📍104. 59  நிமிடத்தில் 10000000  வரை கடன் திட்டம்
📍105. கட்டற்று இருந்த மத மாற்றம் இப்போது கட்டுக்குள் இருக்கிறது
📍106. VVIP கார்களில் பொருத்தப்பட்ட சிவப்பு விளக்குகள் அகற்றம்
📍107. கிட்ட தட்ட அனைவருக்கும் வாங்கி கணக்கு (குறைந்த பட்ச தொகை தேவை இல்லாதது )
📍108. தனி நபர் வருமானம் 1 .17 லட்சமாக அதிகரிப்பு
📍109. பினாமி சொத்து சட்டம்
📍110. உள்நாட்டு பாதுகாப்பில் ௦ பொது மக்கள் உயிரிழப்பு என்ற சாதனை
📍111. மத கலவரங்கள் கட்டுக்குள்
📍112. முத்தலாக் தடை சட்டம் , மற்ற கட்சிகள் ஒத்துழைப்பு இல்லை
📍113. தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரில் ரயில் பாதை அமைக்க அனுமதி
📍114. LED விளக்குகளின் விலை மிக குறைவு
📍115. உபயோகப்படுத்தாத பல விமான நிலையங்கள் மீண்டும் போக்குவரத்தில் இணைப்பு
📍116. UDAN  திட்டத்தில் விமான கட்டணம் குறைப்பு
📍117. அமைச்சரவை சகாக்கள் யார் மீதும் குற்ற சாட்டு இல்லை
📍118. பெண்களுக்கு அமைச்சரைவயில் முக்கிய பதவிகள் ,
📍119. சூரிய மின் உற்பத்தியில் சாதனை
📍120. நிலக்கரி இறக்குமதி குறைக்கப்பட்டு ,உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு
📍121. மின் உற்பத்தி நிலையங்களின் நிலக்கரி கையிருப்பு எப்பபோதும் நல்ல நிலையில்
📍122. திருக்குறள் நாடு முழுவதும் பாடத்திட்டத்தில் இணைப்பு
📍123. மீன் வளத்துக்கு தனி அமைச்சரவை
📍124. ரயில் பயண கட்டணம் ஏற்றப்படவில்லை
📍125. தமிழ் நாட்டில் கோவை -பெங்களூரு இரண்டு அடுக்கு ரயில் ,மதுரை சென்னை பகல் நேர ரயில் போன்ற பல ரயில்கள்
📍126. 17  வருடமாக விடுமுறை எடுக்காத ஒரே தலைவர்
📍127. வெளி நாட்டு பயணத்தின் போது ஜால்ரா போடும் பத்திரிக்கையாளர்களை அழைத்து செல்லாத ஒரே தலைவர்
📍128. வெளிநாட்டு பயணங்களில் விமானத்திலேயே உறங்கி நேரத்தையும் செலவையும் குறைத்தது
📍129. விவசாயி விற்பனையில் படிப்படியாக இடைத்தரகர் ஒழிப்பு E - NAM  திட்டம் 
📍130. திருப்பூருக்கு பல ஆண்டாக கேட்ட ESI மருத்துவமனை
📍131. பல அரசாங்க மருத்துவ மனைகள் தரம் உயர்வு
📍132. சென்னை விமான நிலைய விரிவாக்கம்
📍133. கோவை விமான நிலைய விரிவாக்கம் ,நில உரிமையாளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருவதாக அறிகிறேன்
📍134. கோவைக்கு வெளி சுற்று வட்ட சாலை
📍135. முந்த்ர திட்டத்தில் கடந்த 7  தேதி வரை 15,73,78,344 கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன
📍136. மின்னணு பண  பரிவர்த்தனை ஊக்குவிப்பு ,BHIM  செயலி அறிமுகம்
📍137. மாஸ்டர், விசா   அட்டைகளுக்கு இணையாக RUPAY  அட்டை ஊக்குவிப்பு
📍138. மிக முக்கியமாக பாக்கிஸ்தான் மற்றும் பர்மா வில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளுக்கு எதிராக துல்லிய தாக்குதல் (surgical strike )
📍139. சிறுபான்மையினர் பாதுகாப்பு
📍140. GST யில் 40  லட்சம் வரை விற்று முதல் உள்ளவர்க்கு விலக்கு
📍141. முறை சாரா(un  organised  sector  )  தொழில் செய்யும் தொழிலாளர்க்கும் ஓய்வூதிய திட்டம்
📍142. பெண் தொழில் முனைவோர் அதிக ஊக்குவிப்பு
📍143 தட்டுப்பாடு இல்லாத உர விநியோகம்
📍144. UREA வில் வேப்பை எண்ணெய் கலந்து தவறான உபயோகம் தவிர்ப்பு
📍145. இதுவரை அமைக்கப்படாத NATIONAL WAR MEMORIAL  டெல்லியில் அமைப்பு
📍146. குடும்பத்தில் ஒருவர் கூட அரசியல் பதவியிலோ ,அரசாங்க பதவியிலோ இல்லை , அரசாங்க வேலையில் கூட மிகவும் குறைந்த அந்தஸ்தில் இருப்பதாக அறிகிறேன்
📍147. இந்தியா ரயில்வே ரயில் பெட்டி தொழிற்சாலை 17 வருடமாக தயாரித்த பெட்டிகளின் அளவை கடந்த 2  ஆண்டுகளில் கடந்து உள்ளது
📍148. Tax free Gratuity limit increase to 20 Lakhs from 10 Lakhs
📍149. பெண்களுக்கு 26  வாரங்கள் பேறு கால விடுப்பு
📍150. ரயில் நிலையங்கள் விமான நிலையங்களுக்கு இணையாக வடிவமைப்பு
📍151. உலக அளவில் 2  வது மிக பெரிய எக்கு உற்பத்தியாளர் என்ற அந்தஸ்து
📍152. ஈரானில் சப்பார் துறைமுகம்
📍153. சர்தார் சரோவர் அணைக்கட்டு திட்டம் நிறைவேற்றம்
📍154. உலகத்தில் பெரிய சிலையாக சர்தர் வல்லபாய் படேல் சிலை அமைப்பு
📍155. மனித உரிமை கவுன்சில் தேர்தலில் 193  ஓட்டுக்கு 188  வாங்கி வெற்றி
📍156. அண்ணா பல்கலைக்கழகம் வேந்தர் போன்றவைகளில்  சூரப்பா போன்ற கல்வியாளர்கள் நியமனம்
📍157.  L & T  மூலம் HOWITZER  பீரங்கிகள் உற்பத்தி செய்து ராணுவத்தில் இணைப்பு
📍158. எந்த மிரட்டலுக்கும் பயப்படாத அரசாங்கம் ,உதாரணம் ௧.தங்க நகை உற்பத்தியாளர் கடை அடைப்பு  2 .லாரிகள் வேலை நிறுத்தம் 3 அய்யாக்கண்ணுவின் உள்நோக்கம் கொண்ட ஆடை அவிழ்த்து போராட்டம்
📍159. ஹாஹாஹா மறந்துட்டேன் தமிழ்நாட்டுக்கு ஜல்லிக்கட்டு !!!!
📍160. தீவிரவாதம் இல்லா நாடு என்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வரலாறு காணாத உயர்வு ,பல வேலை வாய்ப்புகள்  பெருக்கம்
📍161.  காடுகளின் பரப்பு 10  ஆயிரம் சதுர கிலோமீட்டர் க்கு மேல் அதிகரிப்பு
📍162. பரோடாவில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் ஆஸ்திரேலியா ஏற்றுமதி
📍163. சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்று பாகுபாடு இல்லாத திட்டங்கள் மற்றும் வளர்ச்சி
📍164. சர்வதேச மதிப்பீட்டில் நமது பொருளாதாரம் Fragile 5  என்ற நிலையில் இருந்து BAA3 என்ற நல்ல தரம் உயர்த்தப்பட்டது.
📍165. RERA மூலம் வீடு வாங்குபவர்களின் சிரமங்களைக் குறைத்தது
📍166. ஆழ்கடல் மீன்பிடிக்க ராமேஸ்வரம் மீனவர்களுக்கு பயிற்சி மற்றும் படகுகள் வாங்க 90 % மானியம்
📍167. புதிய வீடுகளுக்கு GST குறைப்பு
📍168. ஒரு நாடு ஒரு அட்டை, One Nation One Card  திட்டம் அறிமுகம்.
📍169. விளையாட்டை ஊக்குவிக்க புதிய செயலி அறிமுகம்.
📍170. புல்வாமா தாக்குதலுக்கு உடனே பதிலடி, பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 
📍171. சிறை பிடிக்கப்பட்ட விமானி ஒரே நாளில் விடுதலை என்ற சரித்திரம்.
📍172. சாகர் மாலா திட்டத்தின் கீழ் பல புதிய துறைமுகங்கள்.
📍173. ராமேஸ்வரம் - மண்டபம் இடையே புதிய பாம்பன் பாலம்.
📍174. கன்யாகுமரியில் இதுவரை இல்லாத அளவு 40,000 கோடிக்கு வளர்ச்சித் திட்டங்கள்
📍175. பலரும் பரப்பும் பொய் போல் இல்லாமல் 6  மான்ய சிலிண்டர் என்பதை 12  ஆக உயர்த்தி விலை ஏற்றம் இல்லாமல், பதிவு செய்த உடன் கிடைக்க செய்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 1200 + விற்கப்பட்டது என்பதை இங்கே தவிர்க்க முடியாமல் பதிவு செய்கிறேன்.
📍176. சீனா எல்லையில் பல சாலைகள் மற்றும்  பாலங்கள்.
📍177. பலமான அயல்நாட்டு உறவு ,அனைத்து நாடுகளும் நமது நிலைப்பாட்டுக்கு ஆதரவு
📍178. மலிவு விலை மத்திய அரசு மருந்து கடைகள்
📍179. பாக்கிஸ்தான் உடனான நதி நீர் பங்கீட்டில் நமது பங்கை சரியாக உபயோகப்படுத்த நடவடிகக்கை.
📍180. விபத்து காப்பீடு வருடம் 2  லட்சம் பலனுக்குப் பிரீமியம் தொகை வெறும் 12 ரூபாய்
📍181. உயிர் காப்பீடு 2  லட்ச ரூபாய்க்குப் பிரீமியம் தொகை 330  ரூபாய்
📍182. ஸ்டாண்ட் அப் இந்தியா மூலம் SC/ST, பெண்களுக்கு 10 லக்ஷம் முதல் 2 கோடி வரை தொழில் தொடங்க கடன்.
📍183. ஈரான் நாட்டிலிருந்து எரிவாயு பைப் மூலமாக கொண்டு வர ஒப்பந்தம்.

செய்ததை மட்டுமே எழுதி இருக்கிறேன்..!
விடுப்பட்டதை சொன்னால் சேர்க்கிறேன்..!

நீ ஏன் செய்யவில்லை என்று கேட்கவில்லை,
செய்ததை சொல்லியிருக்கிறேன்.
நெகடிவ் அரசியல் செய்ய விரும்பவில்லை
நல்லதை சொல்லுவோம்..!

Thursday 14 March 2019

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி.. என்ன வியாதி?

அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி?

அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..

கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி?

நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி?

இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி?

உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி?

கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.

டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி?

சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி?

நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி?

தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

சிவந்த உள்ளங்கை என்ன வியாதி?

கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.

டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

வெளுத்த நகங்கள் என்ன வியாதி?

இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!

ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி?

ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.

டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி?

சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.

டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.

வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி?

பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி?

வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.

டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி?

உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.

டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing