Showing posts with label இளைஞர் சங்கமம். Show all posts
Showing posts with label இளைஞர் சங்கமம். Show all posts

Tuesday, 24 June 2014

உலக உதை பந்தாட்ட சாம்பியன் கிரிஸ்டியானோ ரொனால்டோ பற்றி ஒரு சிறப்புத் தகவல்

உலக உதை பந்தாட்ட சாம்பியன் கிரிஸ்டியானோ ரொனால்டோ பற்றி  ஒரு சிறப்புத் தகவல் :

ரொனால்டோவின் சாதனைகளைப் பற்றிய ஒரு பேட்டியின் போது, "எனது அனைத்து 

வெற்றிக்குமே காரணமானவன் என் பழைய நண்பன் 'அல்பேர்ட் ஃபாண்ட்ரா‘ (Albert Fantrau) தான்என்று வெளிப்படையாக ஒரு அறிக்கையை ரொனால்டோ வெளிப்படுத்தினார். பேட்டியெடுத்தவர்களுக்கோ ஆச்சரியம். இதுவரை கேள்வியே பட்டிராத பெயர் அது. அதை விவரிக்கும்படி ரொனால்டோவிடம் கேட்டுக் கொண்டனர். அவர் சொன்னது இதுதான்.

. "
நானும், என் நண்பன் அல்பேர்ட்டும் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான உதைபந்தாட்ட டீமில் விளையாடிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில், 'Sporting Lisbon’ ஐச் சேர்ந்த மனேஜர் எங்கள் டீமைப் பார்வையிட வந்திருந்தார். அத்துடன் அவர் திறமையான ஒரு விளையாட்டு வீரனையும் தெரிவு செய்ய இருந்தார். அப்போது நடைபெற்ற உதைபந்தாட்டப் பயிற்சி விளையாட்டில், யார் அதிக கோல்களைப் போடுகின்றனரோ, அவர்களையே தெரிவு செய்யப் போவவதாகவும் அவர் சொன்னார். விளையாட்டு ஆரம்பமாகி முதல் கோலை (Goal) நானும், அடுத்த கோலை அல்பேர்ட்டும் போட்டோம். விளையாட்டு முடியும் நேரம் வந்த இறுதிக் கட்டத்தில், அல்பேர்ட்ட்டுக்கு ஒரு கோலை அடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் அவன் அதை அடிக்கவில்லை. அந்தப் பந்தை என்னிடம் தட்டிவிட்டான். அந்தக் கோலை நானே அடித்தேன். உலகப் பிரசித்தமாகப் போகும் ஒரு சந்தர்ப்பத்தை அவன் எனக்குத் தந்தது பெரிய விசயம். அவனிடம், 'ஏன் இப்படிச் செய்தாய்?' என்று கேட்டேன். அவன் சொன்னான், 'இதற்குத் தகுதியானவன் நீதான்' என்று. இன்று நான் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு விளையாட்டு வீரனாக இருக்கிறேன். ஆனால், அவனோ இது எதுவுமில்லாமல் அனைத்தையும் நண்பனுக்காக இழந்து தியாகியாக நிற்கிறான் 

கிரிஸ்டியானோ சொன்னவற்றைக் கேட்ட நிருபர்கள் ஆச்சரியத்தின் உச்சத்துக்குப் போனார்கள். 'ஒருவன் இந்த அளவுக்கு உச்சிக்குப் போனாலும், இப்படி உண்மையைப் போட்டு உடைப்பானா?' என்று நினைத்தார்கள். அல்பேர்ட் வசிக்கும் இடம் நோக்கிச் சென்றார்கள். நடந்த உண்மை பற்றி விசாரித்தார்கள். அவையெல்லாம் உண்மைதான் என்று அல்பேர்ட்டும் ஒத்துக் கொண்டார்.


.
அந்த நேரத்தில்தான் நிருபர்களுக்கு ஒரு விசயம் நெருடியது. "அனைத்தையும் இழந்து நீங்கள் நிற்பதாக கிரிஸ்டியானோ சொன்னாரே! ஆனால், நீங்கள் கோடீஸ்வரர்கள் வாழும் ஒரு வில்லாவில், கார்கள், வசதிகளென, அனைத்தையும் சொந்தமாக்கி, ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்கிறீர்களே! அது எப்படி?“ என்று கேட்டார்கள்.

.
அதற்கு அல்பேர்ட் சொன்ன பதில், 'இவையெல்லாம் என் ஆருயிர் நண்பன் கிரிஸ்டியானோ கொடுத்தது

.
வாழ்த்துகள் கிரிஸ்டியானோ ரொனால்டோ! 

via:
ராஜ்சிவா


Saturday, 29 March 2014

சில பயனுள்ள போன் நம்பர்கள் மற்றும் தகவல்கள்

முடிந்த வரையில் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை அனைவருக்கும் பகிரவும் !
1.தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.
2.குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது எந்த இணையத்தில் தேடினால் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிடைக்கும் என்பது நமக்கு தெரியது அபொழுது இந்த இணையதளம் நமக்கு உதவும் http://www.friends2support.org
3. விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.
4.மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
5.வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.
6.அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே! அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.
7.இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை வளர்க்க முற்படலாமே
8.கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும்.http://ruraleye.org/
9.பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471
10.இரத்தப் புற்று நோய்:
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.
மேலும் விபரங்களுக்கு வகை :
புற்றுநோய் முகவரி:
East Canal Bank Road,
Gandhi Nagar,Adyar
Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241
முடிந்த வரையில் நண்பர்கள் அனைவரும் இந்த பதிவை அனைவருக்கும் பகிரவும் ! நன்றி ! வாழ்க வளமுடன் !

Thursday, 20 March 2014

பாரத முன்னேற்றத்திற்கு இளைஞர்களின் பங்கு

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அரசாங்கம் பல்வேறு திட்டங்களை தீட்டி அதன் மூலம் நாட்டை முன்னேற்ற பாதையில் செலுத்த முயன்றாலும் இன்று வரை சமுதாயத்தில் உள்ள பல்வேறு சிக்கலை தீர்க்க இயலவில்லை என்பது நாம் அறிந்ததே, இந்த சமுதாய பிரச்சனைகளை அகற்ற முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் தன்நலமற்ற தலைவர்கள் காணாமல் போனதும் சுயநல வாழ்க்கை முறையுமே. 

தற்போது பாரத தாயின் குழந்தைகளான இளைஞர்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் தாம் ஆற்ற வேண்டிய கடமை என்னவென்று சிந்திக்கும் காலம் தொடங்கிவிட்டது ஆனால் தொலைநோக்கு பார்வையில் சிந்திக்கவும் செயல்படவும் அவர்களை வழிநடத்தும் கல்வி பாடத்திட்டமோ மற்றும் அவர்கள் செய்யும் தொழிலோ வேலையோ கற்றுத்தரவில்லை. 

முதலில் நாம் செய்ய வேண்டியது இன்றைய தலைமுறைக்கு போதிய பொருளாதாரம், தொழிற்கல்வி, சுயதொழில் உத்திகள் மற்றும் அறிவியல் வளர்ச்சியில் புதுப்புது கண்டுபிடிப்புகளை செய்ய தூண்டி விடவேண்டும் இவை அனைத்திலும் இயற்க்கையும் விவசாயமும் சீர்கெடாத வகையில் செயலாற்ற இளைஞர்களை வழிநடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

 சுயநலமும், பொருளாதர சுரண்டலுமே தொழிலாக செய்யும் பல அரசியல் தலைவர்களையும் அரசாங்க ஊழியர்களையும் நம்பி இந்திய முன்னேற்றம் இல்லை. வலிமையும் தன்நலமற்ற தியாக உள்ளம் கொண்ட புதல்வர்களின் தோல் மேல் பயணம் செய்யவே இந்திய தாய் விரும்புகிறாள் அப்படிப்பட்ட இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து நாடும் வீடும் செழிக்க உழைக்க வேண்டும் என்று உறுதி கொள்வோமாக.

கருவில் சுமந்தவளையும் சேர்த்து சுமந்தது இந்த மண்தானென்று மனதில் வைத்தால் நாட்டிற்கும் மக்களுக்கும் தீங்கிழைக்கும் எண்ணம் கடுகளவும் தோன்றாது, ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையான காரணிகளாக சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, நேதாஜி மற்றும் பல தேசத்திற்காக வாழ்ந்த தலைவர்கள் நமக்கு விட்டு சென்ற பாடம்,
 

Ø அறியாமையை அகற்றும் கல்வ

Ø ஏழ்மையை போக்கும் பொருளாதாரம

Ø பசியினை போக்க உணவு உற்பத்த

Ø இயற்கையை சிதைக்காத தொழில்நுட்ப, விஞ்ஞான வளர்ச்ச

Ø சுயதொழில் முன்னேற்றம

Ø சமுக நாட்டம் கொண்ட ஆசிரியர்கள் கலைஞர்கள

Ø இவை அனைத்திற்கும் ஆதாரமான விவசாயம

Ø வழிநடத்தி செல்ல சுயநலமற்ற தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்கள்.

 அனைத்தையும் நாம் தனியாக செய்ய இயலாது, இந்த துறைகளில் எது நமக்கு ஏற்புடையதோ அதை நன்கு கற்று சிறப்புடன் செயலாற்ற வேண்டும், இப்படி பல துறைகளில் இணைந்து செயல்படும் போது நாடும் வீடும் செழிக்கும்.

 

Thanks Dear: .பாஸ்கர,திருவண்ணாமலை.

 

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing