Wednesday 27 July 2016

சல்யூட்



கலாம் ஐய்யாவின் பொன்மொழிகள்:

பொன்மொழி 1
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.
ஆனால், 
இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!
பொன்மொழி 2
கனவு காணுங்கள்!
ஆனால் கனவு என்பது
நீ தூக்கத்தில் காண்பது அல்ல..
உன்னை தூங்க விடாமல்
செய்வதே (இலட்சிய) கனவு


பொன்மொழி 3
நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும்,
எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
பொன்மொழி 4
நாம் அனைவருக்கும்
ஒரே மாதிரி திறமை
இல்லாமல் இருக்கலாம்.
ஆனால்,
அனைவருக்கும் திறமையை
வளர்த்துக் கொள்ள ஒரே
மாதிரி வாய்ப்புகள்
உள்ளன.
பொன்மொழி 5
ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல...
உன்னைப் போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே...
பொன்மொழி 6
அழகைப் பற்றி கனவு காணாதீர்கள்,
அது உங்கள் கடமையை பாழாக்கி விடும்.
கடமையை பற்றி கனவு காணுங்கள்,
அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
பொன்மொழி 7
ஒரு முட்டாள் தன்னை முட்டாள்
என்று உணரும் தருணத்தில்
புத்திசாலியாகின்றான்.
ஆனால்,
ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி
என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில்
முட்டாளாகின்றான்
பொன்மொழி 8
கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை,
கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.
பொன்மொழி 9
கஷ்டம் வரும் போது
கண்ணை மூடாதே,
அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார்,
அதை வென்றுவிடலாம்.
பொன்மொழி 10
உன் கை ரேகையைப் பார்த்து
எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே...
ஏனென்றால்,
கையே இல்லாதவனுக்கு கூட
எதிர்காலம் உண்டு.

India mourns the loss of a great scientist, a wonderful President & above all an inspiring individual. 

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing