Friday 25 November 2016

அரசை ஆதரிப்போம் நமது தேசத்திற்காக ! நமது நன்மைக்காக !

இந்தியாவில் இருக்கும் பல மாநிலங்களுக்கு சென்றிருக்கிறேன் . இந்தியாவின் தலை முதல் கால் வரை நான்  கண்ட பொதுவான  ஒரு விஷயம் என்னவென்றால் நட்சத்திர  ஹோட்டல் , தனியார் மருத்துவமனை ,விமான நிலையம் இந்த மூன்று இடங்களைத்தவிர வேறு இடங்களில் கழிவறை சுத்தமாகவே இருக்காது . 

இந்தியாவின் எந்த  மூலைக்கு  சென்றாலும் இது தான் நிலைமை .. சுத்தமில்லாத ,சுகாதாரமில்லாத  கழிவறைகள் மட்டும்
இந்தியாவின் சாபக்கேடு .  ஒவ்வொருவரும் நம்முடைய கடமையிலிருந்து எதோ ஒரு விதத்தில்  தவறும் பொழுது தான் நாடு கடனாளி ஆகிறது.சுத்தம் சுகாதாரத்திற்கு அதிகம் செலவு செய்ய முடியாமல் போகிறது . கருப்பு பணம் பதுக்கல் லஞ்சம் , ஊழல் ஆகிய எல்லா வேலைகளுக்கும் நாம் உடந்தையாக இருக்கிறோம். நம் அளவிற்கு எல்லாம் சரியாக இருந்தால் போதும் என்று நினைக்கிறோம் .அதனால் மற்ற விஷயங்களில் பெரும் சிரமத்திற்கு உட்ப்படுகிறோம்

கொழுத்த  பணம்  வைத்திருப்பவர்களுக்கு இந்தியாவில் இருக்கும் எந்த சங்கடங்களும்  பாதிப்பு ஏற்படுத்தாது. விமானத்தில் பறந்து , நட்சத்திர ஹோட்டலில் தங்குவதால்  யாருக்கும் சாதாரண மக்கள் படும் சிரமம் தெரிய வாய்ப்பில்லை. கருப்பு பணம் சேர சேர ஒவ்வொருவரும் மக்களிடமிருந்து விலகி பெரிய கடவுளாக வளம் வர ஆரம்பிக்கிறார்கள் .

அரசு அவர்களை கட்டுப்படுத்த  ஒரு நடவடிக்கை எடுக்கும் பொழுது  அதனால் நமக்கும் சிறிது  சிரமம் இருக்கத்தான் செய்யும் .சில குளறுபடிகளும் இருக்கலாம். ஏனெனில் இந்தியா உலகத்தில் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது . இத்துணை பேர் இருக்கும் ஒரு நாட்டில் கிட்டதட்ட  எல்லா மதத்தினரும் இருக்கும் நாட்டில் ஏகோபித்த ஆதரவுடன் ஒரு திட்டம்  நிறைவேறும் என்று எதிர்பார்க்க முடியாது . எதிர்ப்பு இருக்க தான் செய்யும். ஆனால் Demonetisation    நடவடிக்கையால்வறுமை  கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்கள் யாருமே பாதிப்பு அடையவில்லை .பாதிப்பு எல்லாம் கருப்பு பணம் சேமித்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே .

ஒவ்வொரு கருப்பு  பண ஒழிப்பு நடவடிக்கைக்கும் பொது மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். நம்மிடம் மடியில் கணம் இல்லை அதனால் வழியில் பயம் எதற்கு. நாம் எதிர்ப்பு தெரிவித்தால் நம்முடைய இந்த சிறு எதிர்ப்பை பயன் படுத்தி கருப்பு  முதலைகளுக்கு கருப்பு பணத்தை  பதுக்கி வைக்க  சாக்காக போய்விடும்.

மீண்டும் கழிவறை விஷயத்திற்கே வருகிறேன் . ஒரு கண்காட்சி  , உயிரியல் பூங்கா , அருவி, கோயில் , பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை ,அரசு அலுவலகம் ஆகிய பொது மக்கள் கூடும் இடங்களில்  கழிவறை , மேலை நாடுகளில் இருப்பது போல் சுத்தமாக இருக்க  வேண்டும் அதற்கு இந்தியாவை முதலில் சுத்தப்படுத்த வேண்டும்.  பணமதிப்பிறக்கம்  நடவடிக்கைக்கும் கழிவறை சுத்தத்திற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்பவர்களுக்கு  ....உங்கள் மூளைக்கும் கிட்னிக்கு  எந்த அளவு சம்மந்தம் இருக்கிறதோ அதே அளவு சம்மந்தம் கருப்பு பணம் ஒழிப்புக்கு  கழிவறைக்கு இருக்கு .  அரசை  ஆதரிப்போம்  நமது தேசத்திற்காக !  நமது   நன்மைக்காக !

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing