Monday 26 December 2016

நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும்இழக்கக் கூடாத

ஒரு தடவை படித்து பாருங்கள்  இந்த கதையை. 

பல தடவை யோசிப்பீர்கள் 

               

நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு 
இருந்தன. மெலிதாய் காற்று வீசிக்கொண்டு 
இருந்தது..!!


காற்றை கண்டதும்...
'அமைதி‘ என்ற முதல் மெழுகுவர்த்தி ‘ 
ஐயோ காற்று வீசுகின்றது, நான் ☁அணைந்து
விடுவேன் என்று பலவீனமாக சொன்னது.
காற்று பட்டதும் ☁அணைந்துவிட்டது.


‘அன்பு ‘ என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் 
காற்றை எதிர்க்க முடியாது’ என்று ☁அணைந்துவிட்டது.


'அறிவு‘ என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும்
காற்றை எதிர்க்க முடியாமல் அணைந்தது.


நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று 
வீசிய சிலநொடிகள் போராடி ஜெயித்துவிட்டது.



அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான்.

‘அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் ☁☁அணைந்துவிட்டதே' 
என்று கவலையுடன் சொன்னான்.


அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி 
சொன்னது, வருத்தப்படாதே நான் இருக்கின்றேன். 

என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற வைத்துகொள்’ 
என்றது.


சிறுவன் உடனே..
நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து 
” உன்பெயர் என்ன.?”என்று கேட்டான்..


'நம்பிக்கை' என்றது அந்த மெழுகுவர்த்தி.

நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும்
இழக்கக் கூடாது...!!


No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing