Thursday 27 July 2017

#திருடர்கள் ஜாக்கிரதை

#தெரிந்துகொள்வோம் #தமிழர் #பாரம்பரியம்

#செம்பருத்தி பூ

#வெற்றிலையின் பயன்கள்

#ஆவாரம் பூ பயன்

#பொன்னாங்கண்ணி கீரை பயன்கள்

#மணத்தக்காளி கீரை பயன்கள்

#நொச்சி இலை பயன்கள்

#முடக்கத்தான் கீரை பயன்கள்

#வெந்தயக்கீரை பயன்கள்

#சோற்று கற்றாழை பயன்கள்

#நல்லதே நடக்கும்

Good morning

#அகத்திக்கீரை பயன்கள்

Sunday 23 July 2017

இது மனைவிக்கு மட்டும் இல்லை கணவர்களுக்கு தான்

அது ஒரு சைக்காலஜி வகுப்பு... ஆசிரியர் வந்து, "இன்னைக்கி நாம ஒரு கேம் விளையாடப்போறோம் ..." என்று கூறிவிட்டு ஒரு பெண்ணை அழைத்து, "இந்த போர்டில் உனக்கு முக்கியம் என்று தோன்றும் 30 பேர் பெயரை எழுதுங்கள்..." என்று பணித்தார்.

அந்த பெண்ணும் எழுதினார். பெயர்களை கவனித்த அவர், "இதில் உங்களுக்கு முக்கியம் இல்லை எனும் ஐந்து பேர் பெயரை அழித்து விடுங்கள்" என்றார்... அந்த பெண் உடன் பணிபுரியும் ஐந்து பேரின் பெயரை அழித்தார்.. அடுத்து மீண்டும் ஐந்து பேர் பெயரை அழிக்க சொன்னார். அந்த பெண் பக்கத்துக்கு வீட்டினர் ஐந்து பேரின் பெயரை அழித்தார்...

இப்படியே அழித்து அழித்து கடைசியில் நான்கு பெயர்கள் மட்டுமே இருந்தன போர்டில்... அது அவரின் பெற்றோர், கணவர் மற்றும் ஒரே மகன்....

இப்போது மீண்டும் இரண்டு பேர் பெயரை அழிக்க சொன்னார்... இப்போது தான் அங்கிருந்த அனைவரும் இங்கே நடப்பது வெறும் விளையாட்டு இல்லை என்பதை உணர்ந்தனர்...

வேறு வழியே இல்லாமல் அரை மனதுடன் அவளின் பெற்றோர் பெயரை அழித்தார் அந்த பெண்...

மீண்டும் ஒரு பெயரை அழிக்க சொன்னார் அந்த ஆசிரியர்... அந்த பெண் அழுது கொண்டே... நடுங்கும் கரங்களுடன் மிகுந்த வேதனையுடன் அவரது மகனின் பெயரை அழித்து விட்டு கதறிவிட்டார்...  ஆசிரியர் அவரை அவரது இருக்கைக்கு போகச்சொல்லிவிட்டு, "ஏன் உங்கள் கணவர் பெயரை தேர்ந்தெடுத்தீர்கள்... உங்கள் பெற்றோர் தானே உங்களை பெற்று வளர்த்து ஆளாக்கினர். உங்கள் மகன் தானே உங்களுக்கு தாய்மை அளித்தான். .. பின் ஏன் ..?" என்று கேட்டார்.. முழு அரங்கமும் ஆவலுடன் அவள் அளிக்கப்போகும் பதிலுக்காக காத்திருந்தது...

அதற்கு அந்த பெண்...."இருக்கலாம்.. என் பெற்றோர் எனக்கு முன்னமே இறந்துவிட வாய்ப்புள்ளது... என் மகன் படிப்பிற்காகவும், அவனது வாழ்க்கைக்காகவும் என்னை பிரிந்து விட நேரலாம்.... ஆனால் எப்போதும் என் கூட இருந்து தனது வாழ்க்கை முழுமையும் எனக்காக அர்ப்பணிப்பவர் என் கணவர் மட்டுமே.. அதனால் தான்...." என்றார்.....

அனைவரும் எழுந்து நின்று கை தட்டி அவரை பாராட்டினர்.... இது தானே உண்மை .... உங்கள் வாழ்க்கை துணையை எப்போதும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்த தவறாதீர்கள்...... அதன் பொருட்டே இறைவன் உங்களை இணைத்திருக்கிறான் என்பதை உணருங்கள்...தோழமைகளே...

*இது மனைவிக்கு மட்டும் இல்லை கணவர்களுக்கு தான்*

Friday 21 July 2017

Winning attitude with less investment, ensuring strong Return On Investment

Wife - Lets go for a dinner tonight.

Husband (HR Manager) - Ok.

Husband - Should we go to a cheaper restaurant ?

Wife - No. Let's go to Royal Palace hotel.

Husband - (silence for a minute) - Ok, See you at 7.O 'Clock.

On the way, around 6.30 pm...

Husband - Once upon a time, I had pani puri competition with my sister and she ate 30 pani-puris and defeated me.

Wife - What's so difficult in it?

Husband - Defeating me in Pani-puri eating competition is so difficult.

Wife - I can easily beat you.

Husband - Please leave it. It's not your cup of tea.

Wife - Let us have that competition right now.

Husband - So you want to see yourself defeated?

Wife - Let's see.

They both stop at a Pani-puri stall and start eating...

After about 30 Pani-puris the husband gave up.

The wife was also full, but to defeat her husband, she ate one more and shouted, *"You lose."*

The bill was Rs 50/- and wife was back home and happy as she won the bet.

Moral of the Story...

*Main aim of a HR Manager is to satisfy employee with minimum investments. Winning attitude with less investment, ensuring strong Return On Investment!* 😃😜😀😄😆😅😂😝😎

Tuesday 11 July 2017

பாரதத்தை சரியாக வழி நடத்த ஒரு மாவீரன் வந்து விட்டான் _ திருமதி.பூமா குமாரி

திருமதி.Bhooma Kumari அவர்கள் நம் பிரதமர் மோடி அவர்கள் பிரதம வேட்பாளர் ஆகும் போது நம் கட்சியில் இணைந்து ஐந்து ஆண்டு ஆகியிருந்தன.அதன் பின்னர்
பாஜக கட்சி சார்பான 'ஒரே நாடு' பத்திரிக்கையில் சில காலம் பணி செய்தார்.தேசிய நலன் சார்ந்த சிந்தனைவாதி.பல முறை பேசி உள்ளேன்.தற்போதுதான் திருமதி Uma Anandan அவர்கள் இல்லத்தில்தான் நேரில் சந்தித்தேன்.அவரின் எழுச்சியான சிந்தனை குறித்து பல தகவல்கள் அறிந்தேன்.நல்ல சிந்தனை,செயல்கள் கொண்ட பெண்கள் தமிழக அரசியலுக்கு அதிகமாக தேவை...

இதோ 2014 ஆம் ஆண்டில் திருமதி. Bhooma Kumari அவர்கள் நம் பிரதமர் மோடி அவர்களிடம் கேட்ட கேள்வியும்,அதற்கு நம் பிரதமர் தந்த பதிலின் சாராம்சம் பற்றியும் விவரிக்கிறார் இவர்.

நம் பிரதமர் மோடி அவர்களிடம் ஒருவர் கேள்வி கேட்டு அந்த கேள்வியே நம் பிரதமரையே சலனப் படுத்தியது என்றால் நம் இயக்கத்தை சேர்ந்த அந்த பெண் பூமா குமாரி அவர்களை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா??.

இதோ...

2014 ஜனவரி 11 புது டில்லியில் சரியான குளிர்,சாயங்காலம்,நாங்கள் அகில இந்திய பாரதிய ஜனதா அலுவலகத்தில் பிரதான அறையில் மோடி அவர்களுக்காக காத்து இருக்கிறோம்.
பாஜகவின் பிரதம வேட்பாளர் அல்லவா?!.

சம்பிரதாய அறிமுகம்.வரவேற்புக்கு பின் ஸ்ரீமதி ஸ்மிருதி ராணி திடீரென மைக்கில் இப்போது ஸ்ரீமதி.பூமா ஜி முதல் கேள்வியை கேட்பார் என சொல்லி விட்டு என்னைப் பார்த்து சிரிக்கிறார்.

ஒரு சின்ன அறிமுகமாக, முதல் கேள்வி தனிப்பட்ட கேள்வியாகவே ஆரம்பிக்கலாம் என்று நான் சொன்னதும் அரங்கில் இருந்தவர் கூட ஏதோ சர்ச்சையான கேள்வியாக இருக்குமோ என என்னை உற்று பார்த்தார்கள்.

What are the values that guided little Narendra to become Narendra Bhai Modiji?.
குட்டி நரேந்திரனாக இருந்து நரேந்திரபாய் மோடிஜியாக பரிணாமிக்க வழிகாட்டி மதிப்புகள் யாவை? என நான் கேட்ட போது அரங்கத்தில் பேரமைதி.

கேமராக்களும்,குரல் பதிவுகளும் சப்தமின்றி ஓடிக் கொண்டு இருக்க...
பதிலளிக்கிறார் நம் சிங்கம் சாந்தமாய்.

"சிறு குழந்தையாய் பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் என் அம்மா தயாரித்த தேநீரை கெட்டிலில் தூக்கிக் கொண்டு நான் ரயில் பெட்டிகளில் விற்ற காலத்தில் ஏற்பட்ட வறுமையை என்னை செம்மையாக்க நான் கற்றுக் கொண்டேன்.

பின்னர் ஸ்வயம் சேவக்.
பிரச்சாரகராக சுகாதாரம் பற்றி எடுத்துச் சொல்வதே என் பணி.

அப்பகுதி மக்கள் கொடிய வறுமையில் வாடினர்.ஒரு நாள் எனக்கும் கடுமையான பசி.இரண்டு நாட்களாக எதுவும் உண்ணவில்லை.என் ஏழை தாய் காய்ந்த ரொட்டியை(பக்ரி)யும்,
ஒரு தம்ளர் பாலையும் என் முன் வைத்தார்.

நான் உணவு அருந்த தொடங்கும் போது வீட்டில் இருந்த சிறு குழந்தை அந்த பாலையே பார்ப்பதை கண்டு நான் பாலை அருந்தாமல் குழந்தையிடமே கொடுக்க முனைந்தேன்.என் தாயோ தடுக்கிறார்.
ஏழையான வீட்டில் வேறு பால் இருக்கவும் வாய்ப்பு இல்லை.

எங்களுக்காக எத்தனை கஷ்டப் படுகிறாய்?.
மிக களைத்து போய் பசியில் இருக்கிறார்.நீதான் சாப்பிட வேண்டும். குழந்தையின் பசியை நாங்கள் ஆற்றிக் கொள்வோம் என்றார் என் தாய் உறுதியாக.இதைச் சொல்லும் போது என் தாயின் கண் சிவந்தது.கைகள் நடுங்கியது.கண்ணீர் உருண்டது.

இதை சொல்லும் போதே மோடிஜியின் குரல் கம்மியது.தண்ணீர் அருந்தி தன்னை ஆசுவாசப் படுத்தினார்.

தன்னலமற்ற அந்த தாயின் பரிவும்,வேதனையும் என்னை வழி நடத்துகிறது போலும்.
இதுபோன்ற எண்ணற்றவர்களின் அன்பும்,தியாகமும்,பரிவும் நம் பாரத புண்ணிய பூமியில் இயல்பாய் எத்தனையோ சிந்திக் கிடக்கிறதே என்று எனக்கு பதில் தந்து முடித்தார் நரேந்திரபாய் மோடிஜி.

என் சாதாரண கேள்விக்கு கடைக்கோடி மனிதனையும் தேடிப் போய் உலுக்கும்படியான நிகழ்வினைச் சொன்ன போது இதோ...பாரதத்தை சரியாக வழி நடத்த ஒரு மாவீரன் வந்து விட்டான் என அன்றும் மகிழ்ந்தேன் என்று திருமதி.பூமா குமாரி அவர்கள் சொன்ன போது என் கண்களும் கலங்கியது.

மோடி அவர்கள் பணக்காரர்களை மட்டும்தான் பார்ப்பார் என எத்தனையோ பேர் கதை கட்டுகின்றனர்.சுற்றி உள்ள எத்தனையோ நெருக்கடிகளை நம் மோடி அவர்கள் தாண்டி சாகசம் புரிகிறார்.இதில் நம்மவர்களின் சூழ்ச்சிகளும் உண்டு்.

பசியால் கண்ணீர் வாழ்வை அறிந்த மோடி அவர்கள் நிச்சயம் மாற்றுவார் என்பதே நிஜம்.

கேள்வி கேட்கும் பல பூமா குமாரிகள் நம் இயக்கத்திற்கு இன்னும் அவசியம்.
நம் கேள்விகளே பல உண்மைகளை வெளிக் கொண்டு வரும் மகா சக்தி.

வாழ்த்துக்கள் திருமதி.பூமா குமாரி அவர்களே.

Monday 3 July 2017

மோடியின் GST கார்ப்பரேட்டுக்கு சாதகமானது என கூறுபவர்களுக்காக..

Share செய்யமுடியாததால் Copy & paste பண்ணியிறுக்கேன்
Super பதிவு  Kumar

மோடியின் GST கார்ப்பரேட்டுக்கு சாதகமானது என கூறுபவர்களுக்காக..

இங்கே வெறும் பீட்சாவையும் கடலை மிட்டாயும் ஒப்பிட்டால் போதுமா??

எனக்கு தெரிந்தவரை நான் ஒரு சாமான்யனாக காலை முதல் இரவு வரை நான் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் GST வரி குறைவாகவோ அல்லது வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது....

அவையாவன...
காலை எழுந்ததும் பற்பசை,துலக்கி வரி குறைக்கப்பட்டுள்ளது...

நான் குளிக்கும் சோப்பு,ஷாம்பு வரி குறைப்பு...

நான் உடுத்தும் ஆயத்த ஆடை விலை குறைப்பு...

நான் அணியும் 500ரூபாய் மதிப்புள்ள காலணி வரி குறைப்பு(500-க்கு மேல் வரி அதிகம்)

அத்தியாவசியம் ஆகிப்போன ஸ்மார்ட்ஃபோன் வரி குறைப்பு...

டீத்தூள் வரி குறைக்கப்பட்டுள்ளது...
காலை உணவு இட்லிக்கு தேவையான அரிசி,
உளுத்தம் பருப்பு வரி குறைப்பு...

மதியம் உணவுக்கு தேவையான அரிசி,பதப்படுத்தபடாத காய்கறிகள்,குழம்புக்கு தேவையான பருப்பு வகைகள்,எண்ணெய் வகைகள் வரி குறைப்ப
ு(மேந்தட்டு மக்கள் அதிகமாக பயன்படுத்தும் நெய் வரி அதிகம்)...தயிர் வரி குறைப்பு

உப்பு வரி விலக்கு...கோதுமை வரி குறைப்பு

நான் அசைவ விரும்பியாக இருந்தால் பதப்படுத்தப்படாத மீன்,இறைச்சி வரி குறைப்பு...

இரவு நான் குடிக்கும் பால் வரி குறைப்பு...

இவை அனைத்தும் நம்நாட்டில் 3-ல் ஒரு பங்கு வகிக்கும் அடித்தட்டு வர்க்கம் உபயோகிக்கும் பொருட்கள்...

சரி முதலில் மனிதன் அடிப்படை தேவையை பற்றி அறிமுகம்

1.உணவு(மேலே விளக்கம்)

2.உடை(ஆயத்த ஆடை விலை குறைப்பு)

3.இருப்பிடம்

இருப்பிடம் அமைப்பதற்கு தேவையான சிமெண்ட் வரி குறைப்பு
மணல் ஜல்லி வரி குறைப்பு

இவை தவிர்த்து சாமாண்ய சீமாட்டி அலங்காரத்திற்கு பவுடர்,ஸ்டிக்கர் பொட்டு,குங்குமம் வரி இல்லை...

இது சாமான்யனுக்கான அரசு

யோக்கியர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை...

நாம் வல்லரசு நாடு என வாய் பிளந்து அன்னார்ந்து பார்க்கும் அமெரிக்காவில் 90% மக்கள் முறையாக வரி செலுத்துகின்றனர்...

ஆனால் நாமோ 10% பேர் கூட முறையாக வரி கட்டுவதில்லை

இது எவ்ளோ பெரிய கேவளம் தெரியுமா??

GST வந்தால் கள்ளச்சந்தை ஒழிந்து அரசுக்கு முறையாக வரி செல்லும் அதன்மூலம் நாட்டில் பல திட்டங்களை செயல்படுத்த முடியும்...

என்னவென்று தெரியாமலே விலைவாசி ஏறியதா இறங்கியதா என ஒப்பிட்டு பார்க்காமலே யாரோ சில மோடி எதிர்ப்பு அரசியல் செய்யும் சிலர் அனுப்பும் நாலைந்து மெசேஜ் படித்துவிட்டு சுயமாக சிந்திக்காமல் மூளையை முழங்காலில் வைத்துக்கொண்டு ஆட்டுமந்தை போல் இல்லாமல் சுய அறிவோடு அனுகுங்கள்...

காலம் பதில் சொல்லும்•••
(அவசியம் பகிரவும்)

நன்றி திரு.  Kumar

5% வரி விதிக்கப்பட்ட பொருட்கள்.

கிரெடிட் கார்டுக்கு இரட்டை வரி இல்லை


ஜி.எஸ்.டி., அமலுக்கு பின், கிரெடிட் கார்டுகள் மூலம் செலவழிப்பதற்கு இரட்டை வரி விதிக்கப்படும் என்பது வெறும் புரளி; வதந்தி. இதை நம்ப வேண்டாம் என மத்திய அரசும், வங்கிகளும் தெளிவுப்படுத்தி உள்ளன.

அதிகாரிகள் விளக்கம்:

இது குறித்து மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஹாதியா டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், 
' கிரெடிட் கார்டு மூலம் செலவழித்தால், இரண்டு முறை ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும் என, சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வரும் தகவல் பொய்யானது.

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing