Monday 22 January 2018

பணம் நம்மிடமே, நம் உண்மையான தேவைக்காக பத்திரமாக இருக்கட்டும்

*பணம் சம்பாதிப்பது  செலவு செய்யத்தான்.!*

ஆனாலும் எந்த ஒரு பொருளையும் தேவை இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும் !

சமீப காலமாக அதிக அளவில் ரெஸ்டாரண்ட்டுக்கு போய் சாப்பிடுதல், மால்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் *தேவையற்ற செலவுகளை நாம் யோசிக்காமல்*  செய்வதை பார்க்கிறோம் !

திரையரங்குகளில் விற்கப்படும் *ஒரு டப்பா பாப்கார்ன்  நூறு ரூபாயே என்றாலும்* நாம் க்யூவில் நின்று வாங்கி பிள்ளைகளுக்கு தருகிறோம் !
*'என்றாவது ஒருநாள்தானே, செலவு செய்தால் என்ன?'* என்கிறோம்!

முன்பெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை , தீவுத்திடலில் நடக்கும் பொருட்காட்சி அல்லது மாமல்லபுரம் சுற்றுலா, முட்டுக்காடு படகு சவாரி, முதலியார் குப்பம் படகு சவாரி, ஆகியவற்றுக்கு சற்று செலவு செய்யும்  நம் குடும்பங்கள்  இப்பொழுது மாதத்தில்  பல நாட்கள் இப்படி  இஷ்டத்திற்கு வீண்செலவு  செய்வது சாதாரணமாகிவிட்டது.

நடுத்தர குடும்பங்கள் ஏதோ நாளையோடு சரவணா ஸ்டோர்ஸ, சென்னை சில்க்,pothys,  போன்ற பெரும் கடைகள் மூடப்படுவதைப்போல * வாழ்நாள் முழுக்க எந்நாளும் போய் அலை மோதுகிறார்கள்.*

இதே போல துணி கடைகள், நகை கடைகள், விளம்பரத்தால் தூண்டில் போடும் ஆன்லைன் நிறுவனங்கள் என நடுத்தர மக்களின் சேமிக்கும் பழக்கத்தை குழிதோண்டி புதைக்க பல வர்த்தக சூழ்ச்சிகள் காத்திருக்கின்றன.

*தேவைக்காக பொருள் வாங்கிய காலம் மலையேறிவிட்டது !*
இப்பொதெல்லாம் ஏதாவது வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் பல சமயம் தேவையில்லாமல் செலவு செய்வது ஒரு ஃபேஷனாக ஆகிவிட்டது !

ஆடம்பரத்திற்காக செலவு செய்வதும் அதிகரித்து வருகிறது.

*குறிப்பாக திருமணங்கள். பெற்றோரின் ஆயுட்கால சேமிப்பை மணமக்களின் எதிர்கால வாழ்க்கைக்கு எந்த வகையிலும் பயன்படாத வகையில் செலவு செய்வதற்கே திருமணங்கள் நடத்தப்படுகின்றதோ எனும் ஐயம் நமக்கு ஏற்படுகிறது.*

*"அந்தக்காலம் மாதிரியா ?இப்பொதெல்லாம் வருமானம் அதிகம். அதனால செலவு செஞ்சா தப்பில்ல"* என்ற கருத்தும் பரவி வருவது மிக தவறானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.

சில ஆண்டுகளுக்கு முன் மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட கடும் *பொருளாதார சரிவின் போது இந்தியாவில் அதன் தாக்கம் மிக குறைவாகவே இருந்தது.* காரணம், நமது நாட்டின் மிக பெரிய எண்ணிக்கையிலான நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பாகும்.

நுகர்வு கலாச்சாரம் வரம்பு மீறும் போது, க்ரெடிட் கார்ட் மற்றும் கடன்கள் ( E M I ) தரும் போலி தைரியத்தின் காரணமாக *செலவுகள் எல்லை தாண்டும்போது, நம் பொருளதாரத்தின் அடித்தளம் அசைவுகண்டு  பலவீனம் அடைகிறது !*

எனவே, நாம் அடுத்த முறை நீங்கள் ஒரு செலவை மேற்கொள்ளும் முன் அதன் அவசியத்தை கொஞ்சம் யோசித்து; அப்பொருளை அதன் தேவை கருதி வாங்குவோம் !
பணம் நம்மிடமே, நம் உண்மையான தேவைக்காக பத்திரமாக இருக்கட்டும்.
அது நாம் உழைத்து ஈட்டியது.
*_Money SAVED is money EARNED !_*
*_ வலிமையான, கம்பீரமான,
வாழ்த்துக்களுடன், kskumar
🙏

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing