Thursday 13 September 2018

#அபூர்வ #ஆரோக்ய #ரகசியம்

Ram Ram:
*அபூர்வ ஆரோக்ய ரகசியம்*
********************************
*1.போஜனாந்தே பிபேத் தக்ரம் வாசராந்தரே பிபேத் பய:*
*நிசாந்தே ச பிபேத் வாரி த்ரிபி: ரோகோ ந ஜாயதே*

சாப்பிட்ட பின்னர் *மோர்* குடிக்க வேண்டும், இரவில் *பால்* குடிக்க வேண்டும், காலையில் எழுந்தவுடன் *தண்ணீர்* குடிக்க வேண்டும். இந்த மூன்றும் செய்தால் நோயே அணுகாது.
*2.பிப்பலீ மரீச ஸ்ருங்கவேராணி இதி த்ரிகடுகம்—சுஸ்ருத சம்ஹிதா-38-58*
*சுக்கு, மிளகு, திப்பிலி* ஆகிய மூன்றையும் உணவில் சேர்ப்போருக்கு நோய்கள் வாரா.
*3.ஹரிதக்யாமலகபிபீதகானிதி த்ரிபலா — சுஸ்ருத சம்ஹிதா- 38-56*
*ஹரிதகி (கடுக்காய்) ஆமலக (நெல்லிக்காய்), பிபீடகா (தான்றிக்காய்)* ஆகிய மூன்றையும் காயவைத்து சூரணமாக சாப்பிடுவோரை நோய் அண்டா.
*4.த்ரிமது*
*க்ருதம் குடம் மாக்ஷிகம் ச விக்ஞேயம் மதுரத்ரயம்*
*க்ருதம் (நெய்) குடம் (வெல்லம்) மாக்ஷிகம் (தேன்)* ஆகிய மூன்றும் மதுரம் (இனியவை) எனப்படும். இவை மூன்றும் மருந்துடன் கலந்து சாப்பிட உதவும்.
           - *சித்தர்களின் குரல் shiva shangar*

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing