Monday 5 August 2019

கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்? தெரிந்து கொள்ளலாமா!


கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்? தெரிந்து கொள்ளலாமா!
Curry Leaves :
▪ நாம் சமைக்கின்ற உணவினை தாளிக்கும் பொழுது, குழம்பு ,பொரியல், வறுவல் எதைத் தாளிக்க முயற்சி செய்தாலும் எண்ணெயுடன் கடுகு, கறிவேப்பிலை போட்டு ஏன் தாளிக்கிறோம் என்பது தெரிந்துகொள்ள வேண்டும் விஷயம்தான்.
▪ கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடையும்.
▪ கறிவேப்பிலையை எண்ணையுடன் சேர்த்து வறுக்கும் போது மிகவும் லேசாக வதக்க வேண்டும். இல்லை என்றால் அதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும்.
▪ கறிவேப்பிலையும் கடுகும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை அழிவில் இருந்து பாதுகாப்பதாகவும் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் உருவாவதைத் தடுப்பதாகவும் கண்டுபிடித்து உள்ளனர்.
▪ கறிவேப்பிலையும் பொட்டுக்கடலையும் சம பங்கு கலந்து, பொடியாக்கிப் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டுவர உடல் எடையை அதிகரிக்கலாம்.
▪ இனிமேலாவது, கறிவேப்பிலையைத் தூக்கித் தூர எறிந்துவிடாமல் நன்றாக மென்று சாப்பிடுங்கள்!

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing