Thursday 29 January 2015

ராகு கேது சர்ப்ப தோஷ பரிகாரங்கள்

 
1). தஞசாவூர் மாவட்டம கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் அருள்மிகு திருநாகநாத சுவாமி திருக்கோவிலில் உள்ள மூலவரிற்கு பாலாபிசேகம் செய்து சர்ப்ப தோசநிவர்த்தி அர்ச்சனை செய்ய சர்ப்ப தோசம் நிவர்த்தியாகும்.
2). திருப்பதி அருகேயுள்ள வாயுத்தலமான திருக்காளகஸ்த்தியில் மூலவரான காளகஸ்தீஸ்வரரிற்கு வில்வத்தினால் அர்ச்சனை செய்து, பச்சைக் கற்பூர அபிசேக தீர்த்தத்தினால் அபிசேகம் செய்து அந்த தீர்த்தத்தைப் பெற்று வந்து அந்த தீர்த்தத்தை பதினெட்டு நாட்கள் தொட்ர்ந்து சாப்பிட்டு வர சர்ப்ப தோசம் நிவர்த்தியாகும்.
3). தர்ப்பை, அருகு, பஞ்சலோகம் ஆகியவற்றைக் கொண்ட தாயத்து செய்து நூற்றியெட்டு நாட்கள் அதை அணிந்திருந்து பின் ஓடுகின்ற நீரில் விட்டு விட சர்ப்ப தோசம் நிவர்த்தியாகும்.
4). பிரதோச நாட்களில் பிரதோச வேளையில் சிவனிற்கு வில்வ பத்திரம் கொண்டு அபிசேகம் அர்ச்சனை செய்து, நந்தி தேவரிற்கு வில்வமும் அருகும் சேர்த்த மாலை செய்து அணிந்து வர சர்ப்ப தோசம் நீங்கும்.
5). மாதசிவராத்திரி நாட்களிலும், மகா சிவராத்திரியிலும் முறைப்படி நோன்பு நோற்று சிவவழிபாடு செய்து வர சர்ப்ப தோசம் நீங்கும்.
6). மாரியம்மன் வழிபாடு, புற்றுக்கு பால்வைத்து வழிபாடு செய்து வரவும் சர்ப்ப தோசம் நீங்கும்.
7). குளக்கரையில் வேப்பமரம், அரசமரம் இணைந்துள்ள இடத்தில் இரண்டு நாகங்கள் இணைந்துள்ள நாகர் சிலை செய்து பிரதிஸ்டை செய்ய சர்ப்ப தோசம் நீங்கும்.
8). வினாயகர் மகாமந்திர வழிபாடு, வினாயகர் கவச வழிபாடு, வினாயகர் விரத வழிபாடு முறைப்படி செய்து வர சர்ப்பதோசம் விலகும்

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing