Wednesday 29 June 2016

நாம் எவ்வாறு மருத்துவ வர்த்தகர்களால் ஏமாற்றப் படுகிறோம் என்பதை உணருங்கள்...அவசியம் படியுங்கள்.

மருத்துவ உலகம் எப்படி கோக் மற்றும் பெப்சி கம்பெனிகளின் கைப்பிடிக்குள் சிக்கி சீரழிகிறது என்பதை ஆதார பூர்வமாக விவரிக்கிறது.

எது நார்மல் சுகர் அளவு என்பதையே அமெரிக்க சுகாதார மையம்தான் தீர்மானிக்கிறது.
ரத்தத்தில் சுகர் அளவைக் குறைக்கும் மெட்ஃபார்மின் மாத்திரையை இந்தியாவில் அதிகம் விற்பனை செய்ய வேண்டுமா?..
ரத்தத்தில் சர்க்கரையின் இயல்பு அளவைக் குறைத்து நிர்ணயம் செய்... அவர்களை சர்க்கரை நோயாளிகளாக அறிவித்துவிடு.. அவ்வளவுதான்.. அதன்பிறகு அவர்கள் காலமெல்லாம் நீரிழிவு மாத்திரைக்கு அடிமை.. வியாபாரம் ஜே ஜே என்று நடக்கும்.

இதன்படிதான் இந்தியர்களுக்கு இப்போது நார்மல் சுகர் அளவு என்பது 80-120 / 140 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
அதற்கு மேல் இருந்து விட்டால் அவர் சுகர் நோயாளி.. மாத்திரை சாப்பிட வேண்டும். ஆனால் ரத்தத்தில் அவரின் சுகர் அளவு நார்மல் நிலைக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதானே அவர்கள் தொடர்ந்து மாத்திரை சாப்பிடுவார்கள்??.
அதற்கு என்ன செய்ய வேண்டும்? .
எதைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சுகர் ஏறுமோ அதையே உணவாக எடுக்கச் சொல்..
எதில் சுகர் ஏறும்?
அரிசி மற்றும் கோதுமை..
அப்படியா.. சரி, அரிசி அதிகம் சாப்பிடுகிற தென்னிந்தியர்களை அரிசியை அளவாய் சாப்பிடச் சொல்..கூடவே கோதுமையை அதிகம் எடுத்துக் கொள்ளச் சொல்.
கோதுமை அதிகம் சாப்பிடுகிற வட இந்தியர்களை அரிசி அதிகம் எடுத்துக் கொள்ளச் சொல்.. ரத்தத்தில் சுகர் ஏறிக் கொண்டே இருக்கும். மாத்திரை விற்பனை அதிகரித்துக் கொண்டே இருக்கும். பிரச்சனை சால்வ்ட்..(?!)
எப்படி மருத்துவர்கள் நம்மை வழி நடத்துகிறார்கள் பார்த்தீர்களா?
சரி.. ரத்தத்தில் கொழுப்பைக் கரைக்கும் ஸ்டாட்டின் மாத்திரை விற்பனையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
BMI அளவை மாற்று..
அதென்ன BMI?
உடல் எடை, பருமன் போன்றவற்றை நமது உயரத்திற்கேற்ப நிர்ணயிக்கும் ஒரு கணக்கீடு. இது 1830 களில் உருவாக்கப்பட்டது. இதன்படி ஆரம்பத்தில் ஒருவரது BMI 30க்கு அதிகம் என்றால் அது அதிக பருமன் என்று வரையறை செய்யப்பட்டது.
ஆனால் 1985ல் அமெரிக்க சுகாதார மையம் ஒருநாள் இரவில் BMI 27.8 தான் இயல்பு என்றும், பின்னர் BMI 25 தான் இயல்பு என்று 1990லும் நிர்ணயம் செய்தது.
இதன்படி என்ன ஆனது?
168 செமீ உயரமும் 77 கிலோ எடையும் உடையவரின் BMI 27.8 ஆகும்.
1990ல் இவர் தூங்கப் போகும் போது இவரது BMI நார்மல். ஆனால் இரவு அமெரிக்க சுகாதார நிறுவனம் நார்மல் BMI 25 என்று நிர்ணயம் செய்து விட்டது. எனவே காலையில் அவர் எழும்பும் போது அவர் நோயாளியாக அறிவிக்கப்பட்டு விட்டார். அவர் படுக்கும் பொழுதும், உறங்கும் பொழுதும் இருந்த உயரமும் எடையும் காலையில் எழும்பும் போதும் அப்படியேதான் இருந்தது.
ஆனால் படுக்கும் பொழுது அவர் நோயற்றவர்.. எழும்பும் பொழுது அவர் நோயாளியாக்கப்பட்டு விட்டார். BMI 25க்கும் அதிகமாக இருப்பதால் அவர் இனி ஸ்டாட்டின் சாப்பிட்டாக வேண்டும்.
புரிகிறதா வியாபார தந்திரம்??.
தமிழகத்தில் சுகர் நோயாளிகளுக்கு என்ன உணவு பரிந்துரைக்கப் படுகிறது?.
காலையில் 4 இட்லி
மதியம் : அரிசி சாதம், சாம்பார்,ரசம்
இரவு : சப்பாத்தி.
இதைச் சாப்பிடுவதால் என்ன நடக்கிறது?.
ஒரு இட்லியில் 15கி சர்க்கரை இருக்கிறது. 4 இட்லிக்கு 60 கி சர்க்கரை ஏறுகிறது. சாம்பாரோடு இட்லி சாப்பிட்டால் ஒரு வேளைக்கு 75 கி சர்க்கரை அதாவது 20 டீ ஸ்பூன் சர்க்கரையை ஒரு வேளையில் சாப்பிடுகிறோம் என்று அர்த்தம்.
பிறகு எப்படி ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்?.
நாம் தினமும் ஏற்றுகிற சர்க்கரையைக் குறைக்கத்தான் மாத்திரையை எடுக்கிறோம்.
புரிகிறதா!! எங்கு பிழை வருகிறது என்று?
சர்க்கரையின் அளவு அதிகரித்ததும் அதைக் கட்டுக்குள் கொண்டு வர நம் கணையம் இன்சுலினை அதிகம் சுரக்கிறது. அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையை ஈரலுக்கு அனுப்புகிறது. ஈரல் அதை கொழுப்பாக மாற்றி நம் தொப்பைக்கு அனுப்பி சேகரித்து வைக்கிறது.
இன்சுலின் அதிகம் சுரக்க சுரக்க மீண்டும் மீண்டும் கொழுப்பு உடலில் ஏறுகிறது. உடல் பருமன் அதிகரிக்கிறது.
இன்சுலின் தொடர்ந்து அதிகம் சுரக்க சுரக்க பீட்டா செல்கள் பழுதடைந்து கணையம் பழுதடைகிறது. படிப்படியாக இன்சுலின் சுரப்பதே நின்று போகிறது.
நாம் நிரந்தர நோயாளிகள் ஆகிறோம்.
ஆக்கப் படுகிறோம்.

ஆக 4 அரிசி இட்லி சாப்பிடுவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பது புரிகிறதா?.
ரத்தத்தில் சுகர் ஏறுகிறது என்றால், சுகரே இல்லாத உணவைத்தானே நாம் சாப்பிட வேண்டும்?.
அதுதானே வாழ்வியல் முறை?.

சுகர் துளியும் இல்லாத உணவு எது?.
மனிதனுக்குத் தேவையான அனைத்து விட்டமின்களும், மினரல்களும், கொழுப்புகளும், புரதங்களும் நம் வாழ்வியல் முறைகளில் இருக்கிறது என்பது அன்றே நிரூபிக்கப் பட்டிருக்கிறது.
காய்கறிகள் அதிகமாக எடுங்கள்.
கீரை சாப்பிடுங்கள்.

இரவில் எல்லா பழ வகைகளும் சாப்பிடுங்கள்.
சுகர் டாக்டருக்கு நீங்கள் சுகர் வந்து சாக கூடாது.அப்போதான் அவருக்கு காசு.
ஹார்ட் டாக்டருக்கு அட்டாக் வந்து சாக கூடாது.அப்போதான் அவருக்கும் நித்திய வரும்படி.
அவங்க கோடிக்கணக்கில் செலவு செய்து படித்ததை உங்க்கிட்டதான் கறக்க முடியும்.
நமக்கு ஒரு நோயும் இல்லாமல் தீர்க்கும் டாக்டர் யார் நண்பர்களே?.
என்றும் நாம் மட்டுமே!.
நீங்கள் சாப்பிடும் மாத்திரையினால் சுகர் இன்னும் கீழ் இறங்கும்.
முதல் ஒரு வாரம் உங்கள் சுகர் அளவைக் கண்காணித்து சுகர் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதைத் தினமும் கண்காணித்து படிப்படியாக மாத்திரையின் அளவைக் குறைத்து கொண்டே வாருங்கள்.
சாப்பிடும் உணவை எரிக்க பழகுங்கள்.
உடலில் வாயு,அமிலம் சேராமல் வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

பிறகு மாத்திரையே தேவைப் படாது.
உணவே மருந்து.
நம் உயிர் நம் கையில்...
ஏமாற ஆள் இருந்தால் ஏமாற்ற ஆள் வர மாட்டானா?...
பிள்ளைகளுக்கு உணவுப் பழக்கத்தை கற்றுத் தர தயங்கினால் என்றும் நாம் அமெரிக்க அடிமைகள்தான்.
எங்கள் வீட்டில் மருத்துவ மனை சென்று இருபத்தைந்து வருடம் மேல் ஆகி விட்டது.
என் பிள்ளைகள்,பேத்திகள் வரை தடுப்பு ஊசியே இல்லை.
இதில் 95% பெருமை என் தந்தை தியாகி S.T.ஆதித்தனார் அவர்களையே சேரும்.
பலராமையா அவர்களும் என் தந்தையின் நண்பரே...

தேவைப் பட்டால் அக்கு பஞ்சர்,ஹோமியோ,சித்த முறைகளை கையாளுங்கள்.
வாழ்க வளம் உடன்...சொல்வது
நன்மை பயக்கும் என உணர்ந்தால் பகிருங்கள்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing