Thursday 18 August 2016

ஜம்மு காஷ்மீர் குறித்து நாம் அறியாத சில விஷயங்கள்


ஒவ்வொரு பாரதியனும் அவசியம் அறிந்திருக்க வேண்டும்...
1.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிலப்பரப்பு என்பது காஷ்மீர் என்பது 15% வும் ஜம்மு 26% வும் லடாக் 59% வும் ஆகும்..
2.சுமார் 85000 சதுர கிமீ பரப்பளவு கொண்டது இதில் 85% இஸ்லாமிய மக்கள் வசிக்கின்றார்கள் ,மொத்த ஜனத்தொகை 1.25 கோடியாகும்
3.காஷ்மீரீல் மட்டும் 69 இலட்சம் பேர் வாழ்கின்றனர் இதில் 55 இலட்சம் காஷ்மீரி மொழி பேசுகின்றனர் மீதம் உள்ள 14 இலட்சம் பேர் பாகிஸ்தானி உருது மொழி பேசுகின்றனர்.ஜம்முவில் 53 இலட்சம் பேர் டோக்ரி ,பஞ்சாபி,ஹிந்தியும் மற்றும் லடாக்கில் 3 இலட்சம் பேர் லடாக்கியும் பேசுகின்றனர்.இதில் 7.5 இலட்சம் பேர் குடியுரிமை இல்லாமல் சட்டவிரோதமாக பாக்கிஸ்தான்லிருந்து ஊடுருவி வசிக்கின்றார்கள்.

4.ஜம்மு காஷ்மீரீல் மொத்தம் 22 மாவட்டம் இருக்கிறது இதில் 5மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமே பிரிவினை வாதத்திற்கு ஆதரவாக உள்ளனர்.. அதாவது ஶ்ரீநகர், ஆனந்த் நாக்,பாரமுல்லா,டோதா ,
புல்வாமா ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் தான் பிரிவினையை ஆதரிக்கின்றனர்..மீதமுள்ள 17 மாவட்ட மக்கள் பிரிவினைக்கு எதிராகவும் பயங்கரவாதிக்ச்ளுக்கு எதிராகவும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவாகவும் உள்ளனர்..
இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இந்த 5 மாவட்டங்களில் வசிக்கும் 15% சுன்னி பிரிவு இஸ்லாமியர்கள் மட்டுமே பிரிவினைக்கு ஆதரவாகவும் வன்முறையை அரங்கேற்றுகிறார்கள்.
5.ஜம்மு காஷ்மீரீல் தேசியத்துக்கு ஆதரவாக 15 மதங்கள் அடங்கிய சிறுபான்மை சமூகங்கள் ஆகும் இதில் ஷியா முஸ்லீம்கள் 12% ,டோக்ராஸ் காஷ்மீர் பண்டிட்கள்,சீக்கியர்,பெளத்தர்கள்,குஜ்ஜார் முஸ்லீம்கள்(14%),கிறிஸ்த்தவர்கள் , பஹாடி முஸ்லீம்கள்(8%) இப்படி 45% சிறுகுழுக்கள் தேசியத்துக்கு ஆதரவாக பாரத்தத்தோடு தொடர்ந்து இணைந்திருக்க விரும்புகின்றனர்
மொத்தத்தில் 31% மக்கள் மட்டுமே பாரதத்திற்கு எதிராக பிரிவினையை ஆதரிக்கின்றனர் மீதமுள்ள 69% மக்கள் பிரிவினையை எதிர்ப்பதோடு பாரதத்த்தோடு இணைந்திருக்கவே விரும்புகின்றனர்.
6. தற்போது வன்முறையை முன்னெடுத்து போராடும் பிரிவினைவாத பயங்கரவாத ஆதரவாளர்கள் மேற்சொன்ன 5 மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டுமே மீதியுள்ள 17 மாவட்டத்திலுள்ள மக்கள் எவரும் பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக இல்லை.
7.90 % முஸ்லீம்கள் வசிக்கும் பூஞ்ச் ,காஷ்மீர் ஆகிய இருமாவட்டங்களின் சரித்திரத்திலேயே இதுவரை பிரிவினைக்கு ஆதரவாக எந்த வித போராட்டமும் முன்னெடுக்கப்படவில்லை
இது வரலாற்று பதிவு...
8.வெறும் 15% சுன்னி முஸ்லீம்களின் பிரிவினைவாத போராட்டத்தை எதோ ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீர் மக்களும் போரடுவதாக ஒரு மாயத்தோற்றத்தை தேசவிரோத எழுத்து ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் சேர்ந்து ஊளையும் ஒப்பாரியும் வைக்கின்றன.. இது முழுக்க முழுக்க தேசவிரோத செயல் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை....இவர்களை முதலில் கவனிக்க வேண்டிய வழியில் கவனித்தாலே போதும் காஷ்மீர் பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும்
9.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் கூட இன்று பாரத்ததோடு இணைய விரும்புகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் தேசவிரோத போலி ஊடகங்களை நாம் புறக்கணித்தே ஆகவேண்டும்.
இந்த போலியான பிரச்சாரங்களை நடத்துவது யாரென்று பார்த்தால்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளும் பாகிஸ்தானும் மற்றும் பர்கா தத்தை போன்ற ஊடானஸ் ஊடகவியாதியும் சில தீவிர இடது சாரிகளுமாவர் இவர்களுடைய திட்டமே மீண்டும் பாரதத்தை துண்டாடி பாகிஸ்தானோடு சேர்க்கவேண்டும் என்பதே..
மூலப்பதிவு :இந்திய இராணுவ முக்நூல் பக்கம்

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing