Friday 11 November 2016

கறுப்பு ஆடுகள் தப்பிக்க சிறிதும் வாய்ப்பு கொடுக்காத பிரதமர் மோட

இது வரை எந்த பிரதமரும் எடுக்க துணியாத முடிவு நமது பாரத பிரதமரின் மிகச்சிறந்த துணிச்சலான முடிவுக்கு சிரம் தாழ்ந்த எனது மரியாதைகளும் வாழ்த்துக்களும் தெரிவித்து கொள்கிறேன்.

இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாகவும் சவாலாகவும் இருக்கும் .பிரச்சனை கருப்பு பணம் …! இது ஒரே இடத்தில் சேருவது வரி ஏய்ப்பு செய்வது மட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் பணம் தேங்கி ஏழை எளிய மக்களின் பொருளாதார நிலையை கேள்விக்குறியாக மாற்றுவது.

பிரதமர் மோடியின் புதிய அறிவிப்பால் பெரும் பண முதலைகள் வயிற்றில் ஏகபோகமாய் டன் கணக்கில் புளியை கரைத்து விட்டார்.

கண்டைனர் கண்டைனராக மில்லியன் கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் வெளியே வரும்.அல்லது சாம்பலாக மாறும்.

பாகிஸ்தானில் இருந்து கத்தை கத்தையாக அடிக்கப்படும் கள்ள நோட்டுகளுக்கு முடிவு காணப்பட்டுள்ளது.அந்நிய நாட்டில் இருந்து இந்திய பொருளாதார நிலையை சீர்குலைக்கும் முயற்சிக்கு நிரந்தரமாக சீல் வைக்கபட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள படி புதிய நோட்டுகளில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்து இருப்பதால் புதிய கள்ள நோட்டு அடிப்பது நிரந்தரமாக தடுக்கப்படும்.அது போக இந்த புதியவகை நோட்டுகள் பதுக்கி வைத்திருந்தால் கண்டுபிடிப்பது சுலபம் ஆகும்.ஆக எதிர்காலத்தில் ரூபாய் நோட்டுகளாக பதுக்குவது சாத்தியம் இல்லை.

இது ஒரு வகையான அரசியல் அமைப்புகளை சீர் செய்யும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட ராஜ தந்திர நடவடிக்கைகளில் ஒன்றாகும். மக்களின் ஜனநாயக உரிமைகள் பணம் படைத்தவர்க்கு மட்டுமே சொந்தம் என்ற நிலை மாறி ஏக போக உரிமைகளை அனைவர்க்கும் கிடைக்கும் ஓர் ஏற்பாடாக நினைக்கிறன்.

புதிய நோட்டுகளில் உள்ள பாதுகாப்பு அம்சம் மூலம் லஞ்சம் பெறுவோர் முன் எச்சரிக்கை நடக்க வேண்டிய சூழல் உருவாகும்.அதிக அளவில் சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை நடக்க வாய்ப்பில்லை. லஞ்சம் லாவண்யம் கணிசமாக கட்டு படுத்தப்படும்.

புதிய நோட்டுகளில் high சென்சிவிட்டி அமைப்புகள் உள்ளதாக கூறப்படுவதால் கள்ள நோட்டு புழக்கம் மற்றும் கன்டைனர்களில் பணம் மாறுவது எளிதாக தடுக்க வாய்ப்பு உள்ளது.இந்த புதிய நோட்டுகள் அதிகம் தேங்கும் இடங்களை செயற்கை கொள் மூலம் கண்காணிக்க முடியும் என்ற புதிய தகவலும் வந்துள்ளதால்..பொருளாதார வளர்ச்சி ஓர் குறிப்பிட்ட அளவில் சிறப்பாக மாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

வளர்ந்துவரும் தீவிரவாதம் முடக்கப்படும்..தீவிரவாதம் வளர்வதற்கு துணை செய்யும் பதுக்கல் பணம் முற்றிலும் முடக்கப்படுவதால் தீவிரவாதம் சீர்குலைய ஏகப்பட்ட வாய்ப்பு உள்ளது.இது தீவிர வாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட ஓர் ராஜ தந்திர நடவடிக்கை ஆகும் .இது நாட்டின் வளர்ச்சிக்கு எடுக்கப்பட்ட ஒரு முக்கிய மயில் கல் .

ஒரு நாட்டில் மிகப்பெரிய வளர்ச்சி என்பது அந்த நாட்டில் உருவாக்கப்படும் பணத்தின் மதிப்பை பொறுத்தே காணப்படும்.அதில் ஏகப்பட்ட ஓட்டைகளை வைத்துக்கொண்டு நாடு வல்லரசு ஆக முயற்சி எடுப்பது என்பது இயலாத காரியம் ஆகும்.ஆக தீர்க்கமான சரியான நோட்டுகளை நாம் பராமரிப்பு செய்வது இந்தியா வல்லரசாக மாறுவதற்கு ஏற்படுத்த படும் ஓர் சிறப்பான அடித்தளம் ஆகும்.

மோடியின் அறிவிப்பு வெளியான நிமிடத்தில் இருந்து சமூக வலைத்தளங்களில் இருந்து பாராட்டும் ,தவறான விமர்சனங்களும் சரமாரியாக குவிந்தவண்ணம் உள்ளது. இதில் புதிய பண பரிவர்த்தனையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் எதிர்கால திட்டங்கள் பயன்கள் மற்றும் உலக பொருளாதார நிலையையயும் இந்தியாவின் வளர்ச்சியையும் மட்டுமே அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்பது நன்கு விபரம் தெரிந்தவர்களால் மட்டுமே உணர முடியும்

நேற்றைய தினத்தில் மோடி போட்ட ஒரே ஜீபூம்பாவில் எத்தனை அதிசயம் நடக்க போகிறது என்பதை யாராலும் வெகு சுலபமாக கணிக்க இயலாது.இது ஏற்கனவே ஆரம்ப காலத்தில் பிரதமர் எடுக்க நினைத்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவு. இதை செயல்படுத்த தான் எல்லாருக்கும் ஆதார் அடையாளம்.மற்றும் எல்லாருக்கும் தனது பெயரில் வங்கியில் கணக்கு என்று முன்னேற்பாடுகள் முடக்கி விட்டுள்ளார் என்பதை புத்தி உள்ள அனைவருக்கும் சொல்லாமலே புரிந்து கொள்ள முடியும்.

மோடி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் .வெளிநாட்டுலேயே சுற்றி திரிகிறார் என்பது பத்தாம் பசலிகள் சொல்லி திரியும் வீண் பேச்சுக்கள்..!

*நேர்மையாக இல்லாதவர்கள் இதைபோல ஆணித்தரமான முடிவுகள் எடுப்பது என்பது ஒருபோதும் இயலாத காரியம்.*

இதை பற்றி எனது எனது கடந்த மாத பதிவில் தெளிவாக சொல்லிருக்கேன்( பதிவை காண இந்த link க்கு செல்லுங்கள் https://m.facebook.com/story.php?story_fbid=1148232321923771&id=100002110427457 )...
*இரத்தமும் சதையுமாய் நாட்டு பற்றில் ஊறிய ஓர் அற்புதமான மனிதர் நமக்கு பிரதராக கிடைத்தது இந்தியர்கள் நாம் செய்த புண்ணியம் ஆகும்.*
வரும் காலத்தில் இன்னும் நிறைய ஜீபூம்பா பிரதமர் போடுவார்..! அது அனைத்தும் இந்தியாவிற்கு பல நன்மைகளை கொண்டுவந்து சேர்க்கும் என்பதில் எள்ளளவு சந்தேகம் இல்லை .
*மோடி என்ற சிங்கம் அடித்த அடி எத்தனை டன் என்பது அடிவாங்கியர்க்கு மட்டுமே தெரியும்.* தேசப்பற்று மிக்க சாமானியர்கள் சந்தோசமாய் தங்கள் பணியை தொடரலாம். ரேஷன் கடை...டாஸ்மாக் கடை ….வீணாய்ப்போன அரசியல் கட்சி கூட்டம் என எது எதுக்காகவோ காத்துக்கிடக்கும் நாம் கையில் வைத்திருக்கும் சிறிய நேர்மையான பணத்தை மாற்ற நாட்டின் வளர்ச்சியை மனதில் கொண்டு கொஞ்சம் சிரமம் எடுப்பதில் தவறு ஒன்றும் இல்லை.!

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing