Tuesday 29 November 2016

#சர்க்கரை வியாதிக்கு மூலிகை மருத்துவம்


#சர்க்கரைவியாதி அது ஒருநோயல்ல. நோய்களின் ஊற்று.உலகமெங்கும் பரவி வரும் நோயாக சர்க்கரை வியாதி  (நீரிழிவு) உருவெடுத்துவருகிறது. 2015 க்குள், புற்றுநோய், இதயநோய்களை விட, மனிதர்களின் இறப்புக்குநீரிழிவு நோய்தான் முதல் காரணமாகப்போகிறது. நீரிழிவு நோயால் ஏற்படும் இறப்பு,நோயில்லாதவர்களை விட இருமடங்குஅதிகம். இந்தியா போன்ற வளரும்நாடுகளில், வருங்காலங்களில் சர்க்கரைவியாதி நோய் 170 சதவிகிதம் அதிகரிக்கும்.நோயில்லாதவர்களை விட, நீரிழிவு நோய்உள்ளவர்களின் ஆயுட்காலம் 4லிருந்து8வருடங்கள் குறைந்து விடும்.
இவை வெறும்பயமுறுத்தல்கள் அல்ல. நிதர்சனமானஉண்மை. எனவே இதை சமாளிக்க,விழிப்புணர்வு அவசியம் தேவை. வருமுன்காக்கும் வழிகளும், வந்த பின் காக்கும்முறைகளும் மக்களுக்கு போதிக்கப் படவேண்டும்.
நீரிழிவு என்றால் என்ன?
வண்டிகளுக்கு பெட்ரோல்தேவை. அதே போல் உடலுக்கு எரிசக்திதேவை. இந்த எரிசக்தி - க்ளூக்கோஸ். நாம்உண்ணும் கார்போ-ஹைடிரேட் உணவுகள் க்ளுக்கோஸாக மாற்றப்படுகின்றன.இவைகளை ரத்தத்தின் வழியாக உடல்செல்களுக்கு கொண்டு போக வேண்டும்.ஆனால் செல்கள் ரத்தத்திலிருந்துக்ளுகோஸை நேரடியாக எடுத்துகொள்ளாது. செல்லின் பாதுகாப்பு 'பூட்டை'திறக்க சாவியாக கணையம் சுரக்கும்இன்சுலீன் ஹார்மோன் தேவை. இந்தஇன்சுலீன் உற்பத்தி குறைந்தால் அல்லதுசெல்கள் இன்சுலீனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் க்ளுகோஸ்ரத்தத்திலேயே தேங்கி விடுகிறது. ஒரு பக்கம்எரிபொருள் குளுக்கோஸ் கிடைக்காததால்உடல் நலிந்து போகும். இன்னொரு பக்கம்ரத்தத்தில் சர்க்கரை அதிகமாகிபலப்பிரச்சனைகளை உண்டாக்கும் இதுதான் சர்க்கரை வியாதி.
பொதுவானசர்க்கரை வியாதியின் காரணங்கள்
இது தான் நீரிழிவுக்கு காரணம்என்று அறுதியிட்டு சொல்லமுடியாததால்தான் சர்க்கரை வியாதி நோயை பூரணமாககுணப்படுத்த முடியவில்லை. பாரம்பரீயம்,சுற்றுப்புற மாசுபடிந்த சூழ்நிலை,போஷாக்கில்லாமல் போனால்,உழைப்பில்லா வாழ்வு, தவறான உணவுமுறை, அதிக உடல் பருமன், சில மருந்துகள்போன்ற பல காரணங்களை கூறலாம்.
சர்க்கரை வியாதியின் வகைகள்
பல விதமாக பிரிக்கப்பட்டாலும், நீரிழிவுநோயின் இரண்டு முக்கிய பிரிவுகள்
              
டைப் - 1 சர்க்கரை வியாதி (நீரிழிவு)

இது தான் தீவிரமான நீரிழிவு வியாதி மொத்தநோயாளிகளில் 10% டைப் 1 நீரிழிவால்பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரிவினர் தினசரிஇன்சுலீனை ஊசிமூலம் உடலில் செலுத்திக்கொள்ளப்படும்.
டைப் - 2 சர்க்கரை வியாதி (நீரிழிவு)
இன்சுலீன் ஊசி தேவைப்படாமல்மருந்துகளால் கட்டுப்படுத்திக் கொள்ளும்நிலை.
இதைத் தவிர கர்ப்பகால நீரிழிவுஎன்ற பிரிவும் உண்டு. இது கர்ப்பிணிபெண்களுக்கு ஏற்படும். குழந்தைபிறந்தவுடன் மறைந்து விடும்.

சர்க்கரை வியாதி  பரிசோதனைகள்
இரவு பட்டினிக்கு பிறகுகாலையில் ரத்தப்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இந்த ரத்த சர்க்கரைஅளவு 125 மி.கி. அளவை தாண்டக்கூடாது.இரண்டு தடவை இந்த பரிசோதனையைசெய்து கொள்ள வேண்டும்.
பிறகு 75 கிராம் குளுக்கோஸைஉட்கொண்டு, ரத்தத்தை பரிசோதிக்கவேண்டும். இந்த நிலையில், சர்க்கரை அளவு200 மி.கி. அளவுக்குள் இருக்க வேண்டும்.

சர்க்கரை வியாதி அறிகுறிகள்
• அபரிதமாக சிறுநீர் போதல்
• அடங்காத தாகம்
• தீராத பசி
• தீடிரென்று எடை குறைதல்
• பலவீனம், சோர்வு
• கண் பார்வை மங்குதல்

வாழ்க்கை முறை மாற்றம்
முதல் கட்ட சிகிச்சை -வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும்.உணவு கட்டுப்பாடுகள், சத்துள்ள ஆகாரம்ஆகியவையாகும். உடல் பருமன்உள்ளவர்கள் எடையை குறைக்க வேண்டும்.உடற்பயிற்சி அவசியம். யோகா, ஆசனங்கள்இவற்றை செய்ய வேண்டும். 'ஸ்ட்ரெஸ்ஸை' (Stress) தவிர்க்க வேண்டும்.  புகைப்பது, மதுபானம் இவற்றை கைவிடவும்.
உணவு முறை
காய்கறி நிறைந்த உணவு, பாதாம்போன்ற பருப்புகள், பீன்ஸ், நடுத்தர அளவில்பழங்கள், தானியங்கள் இவை நீரிழிவுநோயாளிகளுக்கு ஏற்ற உணவு.நோயாளிகளுக்கு தகுந்த உணவை டாக்டரேசொல்லுவார். முக்கியமானது - இனிப்புகள்கூடாது. நார்ச்சத்து நிறைந்த உணவுபயனளிக்கும்.
மேற்கண்டவை தவிர நீரிழிவுநோயாளிகள் அடிக்கடி இரத்த சர்க்கரைஅளவை சோதனை செய்து கொள்ளவேண்டும்.
மூலிகை மருத்துவமும் சர்க்கரை வியாதியும்
'மதுமேகம்' என்பது நீரிழிவு நோயைகுறிக்கும். நீரிழிவின் காரணங்கள்,அறிகுறிகள், தவிர நீரிழிவு வியாதியல்ல,வளர்சிதை மாற்றக் கோளாறு (Metabolic Disorder) என்றவை 5000 வருடங்களுக்குமுன்பே நமது சித்தர்களுக்கு தெரிந்திருந்தது. இந்த உண்மை அலோபதிவைத்தியர்களுக்கு 100 வருடங்களுக்கு முன்புதான் தெரிந்தது. சரக சம்ஹிதையில் மதுமேகத்தின் காரணங்கள், அறிகுறிகள்,சிகிச்சைமுறை விவரமாககொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தவிவரங்கள், தற்போது தெரிந்திருக்கும்விவரங்களுக்கு ஈடானது. எனவே நம் மூலிகை சித்தர்கள் பற்றி நாம் பெருமைஅடையலாம்.
சர்க்கரை வியாதிக்கு மூலிகை மருத்துவம்
மூலிகை மருத்துவத்தின் சிறப்பு- பாதுகாப்பான மூலிகை மருந்துகளைகொடுப்பது மட்டுமில்லாமல் சரியானஉணவுகளையும் பரிந்துரைப்பது. தினமும் 4 மைல்நடக்க வேண்டும்.
குறிப்பாக சர்க்கரை வியாதி பாதித்து 5வருடங்களுக்கு மேல் ஆனவர்கள் மூலிகை மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும், அப்பொழுது தான்சர்க்கரை வியாதியால் வரும் சிக்கல்கள்குறையும்.
சிறுகுறிஞ்சான் 3கி.கி
ஆவாரம்பூ 3கி.கி
நாவல்கொட்டை 11/2 கி.கி.
கடுக்காய் 1 கி.கி.
தான்றிக்காய் 1கி.கி.
கோரைக்கிழங்கு 1கி.கி.
மருதம்பட்டை 11/2கி.கி
மஞ்சள் 1/2கி.கி
நெல்லிமுல்லி1கி.கி
நெருஞ்சில் 11/2கி.கி
முள்ளிவலம்பிசின் 1/2 கி.கி
கருவை பிசின் 1/2 கி.கி
வேப்பம்பிசின் 1/2கி.கி
ஆவாரம்பிசின் 1/2 கி.கி
வாகைபிசின் 1/2 கி.கி.

மேம்ப்ட்ட மூலிகைகள் இவை.
மேற்கண்ட மூலிகைகள் அனைத்தையும் நிழலில் காயவைத்து அரைத்து பொடியாக்கி சலித்து எடுத்து தினமும் காலை மாலை ஒரு ஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் அல்லது சீரகத்தண்ணீரில் அருந்தி வந்தால் உடல் உள்ளுறுப்புகள் பலம் பெற்று சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்வது மட்டுமல்லாமல் சர்க்கரைநோயினால் ஏற்படும் கை,கால் மரத்துப்போதல்,பசியின்மை,சிறுநீரக பாதிப்பு,நாளடைவில் கணையத்தை தூண்டி இன்சுலினை சரக்கச்செய்யும்.கண்,இதயம்,கால்நரம்பு கேடுகளை தடுக்கிறது.கை,கால் மூட்டுவலி,போன்றவற்றை குணமாக்குறது.
மேற்கண்ட சூரணம் வேண்டுவோர் தொடர்புகொள்க.
சிவாலயாசித்தர் பீடம்
மூலிகை மருத்துவம் & ஆராய்ச்சி நிலையம்
காடையாம்பட்டி,பவானி
பவானி தாலுகா,ஈரோடு மாவட்டம்.
தொலைபேசி 9489677086
1மாதத்திற்கான மூலிகைச்சூரணம்
ரூபாய் 550 மட்டுமே.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing