Monday 28 August 2017

கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை. (There are no unanswered prayers!)

*ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல்...*

உங்கள் பல சந்தேகங்களுக்கு இதில் தீர்வு ஒளிந்திருக்கக்கூடும். படியுங்கள்… மீண்டும் மீண்டும் படியுங்கள்… பல வரிகள் மிக மிக ஆழமான பரந்த பொருளை கொண்டவை.
⚜ *சுவாமி விவேகானந்தர் :* நாம் ஏன் எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்?
 *இராமகிருஷ்ண பரமஹம்சர் :* துன்பத்தையே நினைத்து கற்பனை செய்துகொண்டிருப்பது உன் வழக்கமாகிவிட்டது. அதனால் உன்னால் மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை.

Orginal Driving Licence (ஓட்டுநர் உரிமம் அசல்)

Orginal Driving Licence (ஓட்டுநர் உரிமம் அசல்) எப்பொழுதும் ஓட்டுனரிடம் இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு பதில்....
.
பரிசோதிப்பவர்களிடம் இன்டர்நெட் வசதியுடன் ஓட்டுநர் உரிமம் சரிபார்க்கும் கருவியை கொடுப்பதே இந்திய நாட்டிற்கு உகந்ததாகும்
.
Instead of asking the drivers to keep the original driving license, Inspectors can keep the device with internet facility to check

Thursday 17 August 2017

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்

1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?
7வது இடம்
2 )  இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
23 வது இடம்
3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
16வது இடம்
4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?
15வது இடம்

Wednesday 16 August 2017

டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளி இலை சாறு குடித்தால், ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கும்

சித்த வைத்திய முறை
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளி இலை சாறு குடித்தால், ரத்த தட்டு அணுக்கள்  அதிகரிக்கும், நிலவேம்பு குடிநீர் டெங்கு வைரசை அழித்து, காய்ச்சலை  குணப்படுத்தும். மலைவேம்பு இலை சாறு டெங்கு வைரசை எதிர்க்கும் சக்தி  கொண்டது. எனவே இவைகள் மூலம் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்க தமிழக  அரசு உத்தரவிட்டுள்ளது.
தயாரிப்பது எப்படி?

இழந்த நமது மரபணு திறனை வெளியே கொண்டு வர வேண்டியது. இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு இந்தியனின் கடமை

தனக்கு கீழ் படியாத நாடுகளை தீக்கு இரையாக்கி. அந்த நாட்டு மக்கள் பலரை கொன்று. சரணடைந்தவர்களை கொத்தடிமைகளாக்கி கொடுமை படுத்திய கொடுங்கோலன் தான் மாவீரன் என்று சொல்லப்படும் அலெக்ஸ்சாண்டர். அத்தகைய அலெக்ஸ்சாண்டர் தன்னிடம் தோற்று சரணடையாத ராஜா புருஷோத்தமனை எதுவும் செய்யாமல். உன் நாட்டை நீயே ஆண்டு கொள் என்று பெருந்தன்மையாக விட்டிருப்பானா?

சுதந்திர வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மை

சுதந்திர வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மை.
இந்தியாவுக்கு
சுதந்திரம் தரும் நிகழ்வு  எப்படி நடந்தது தெரியுமா?
சுதந்திரம் கொடுப்பதற்கு  ஆங்கிலோ அரசு சார்பில் மௌன்பேட்டன் நியாயமான செய்யபட்டு இருந்தார், இந்திய சார்பில் யார் வாங்கினார் தெரியுமா?  காந்தியா? நேருவா? படேலா?
இவர்கள் யாரும் இல்லை.
சுதந்திர போராட்ட பெருமக்கள் விருப்பத்தின் படி

திருவாவடுதுறை ஆதினம் "ஶ்ரீ தம்பிரான் சாமிகள் " தான் சுதந்திரத்தின் அடையாளமாக செங்கோலை மௌன்பேட்டனிடம் இருந்து பெற்றார்.
செங்கோலை வாங்கும் போது

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை

: *வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.....*👇👇👇
*இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,*
*வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!*
*தேவைக்கு செலவிடு........*
*அனுபவிக்க தகுந்தன அனுபவி......*
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.....*
*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......*
*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை......*
*ஆகவே.......அதிகமான சிக்கனம் அவசியமில்லை. .*
*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே...*
*உயிர் பிரிய தான் வாழ்வு...... ஒரு நாள் பிரியும்.....*
*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*
*உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு......*
*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.....*
*உன் குழந்தைகளை பேணு......*
*அவர்களிடம் அன்பாய் இரு.......*
*அவ்வப்போது பரிசுகள் அளி......*
*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே........*
*அடிமையாகவும் ஆகாதே.........*
*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட*
*பாசமாய் இருந்தாலும், பணி* *காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ*, *உன்னை கவனிக்க*
*இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.......!!!*
*அதைப்போல*
*பெற்றோரை மதிக்காத* *குழந்தைகள்*
*உன் சொத்து* *பங்கீட்டுக்கு-சண்டை போடலாம்......*
*உன் சொத்தை தான் அனுபவிக்க,*
*நீ சீக்கிரம் சாக வேண்டுமென,*
*வேண்டிக் கொள்ளலாம்*-
*பொறுத்து கொள்.*
*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,*
*கடமை ,அன்பை அறியார்*
*அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.*
*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*
*ஆனால்......*
*நிலைமையை அறிந்து*
*அளவோடு கொடு*
*எல்லாவற்றையும்* *தந்துவிட்டு, பின்*
*கை ஏந்தாதே,*
*எல்லாமே இறந்த பிறகு என,உயில் எழுதி*
*வைத்திராதே*
*நீ*
*எப்போது இறப்பாய்* *என-எதிர்பார்த்து*
*காத்திருப்பர்.*
*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,*
*தரவேண்டியதை பிறகு கொடு.*
*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*
*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.....!!!*
*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.......*
*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*
*நண்பர்களிடம் அளவளாவு.*
*நல்ல உணவு உண்டு.....*
*நடை பயிற்சி செய்து.....*
*உடல் நலம் பேணி......*
*இறை பக்தி கொண்டு......*
*குடும்பத்தினர்-நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்- இன்னும்......*
*இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்...!!*
*வாழ்வை கண்டு களி...!!*
*ரசனையோடு வாழ்.....!!*
*வாழ்க்கை வாழ்வதற்கே,....!!*
நான்கு நபர்களை புறக்கணி*
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்
*நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே*
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்
*நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே*
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி
*நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே*
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்
*நான்கு விசயங்களை ஆபரணமாக அணி*
🙋🏻‍♂பொறுமை
🙋🏻‍♂சாந்த குணம்
🙋🏻‍♂அறிவு
🙋🏻‍♂அன்பு
*நான்கு நபர்களை வெறுக்காதே*
👳🏻தந்தை
💆🏼தாய்
👷🏻சகோதரன்
🙅🏻சகோதரி
*நான்கு விசயங்களை குறை*
👎🏽உணவு
👎🏽தூக்கம்
👎🏽சோம்பல்
👎🏽பேச்சு
*நான்கு விசயங்களை தூக்கிப்போடு*
🏃🏻துக்கம்
🏃🏻கவலை
🏃🏻இயலாமை
🏃🏻கஞ்சத்தனம்
*நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு*
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்
*நான்கு விசயங்கள் செய்*
🌷 தியானம் , யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘☘☘☘☘☘☘☘☘
வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடியுங்கள்....

#மண்ணுளிபாம்பை திருடி தேசத்துக்கு துரோகம் செய்பவனை இனி நசுக்கி விடுங்கள்

மண்ணுளி பாம்பு நம்மை நாக்கினால் அல்லது கடித்தால் நமக்கு கை, காலில் குஷ்டம் நோய் வரும் என கிராம மக்களால் நம்பப் பட்டது. இது உண்மை அல்ல. இப்படி ஒரு பயம் இருந்தால் தான் நமது மக்கள் அந்த பாம்பினை தொட மாட்டார்கள் என்பதற்காக நமது முன்னோர்கள் காரணத்துடன் சொல்லி வைத்த பொய்யாகும்...

SAND BOA என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் மண்ணுளி பாம்புகள் தற்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நிலங்களில் மட்டுமே வாழும் சூழ்நிலை உள்ளன. 

இவை பாம்பு இனமா என்று பார்த்தால், அது பாம்பே அல்ல, அது மண்புழு குடும்பத்தை சேர்ந்த ஒரு பெரிய அளவிலான புழு மட்டுமே. மண்ணில் வாழும் இது பாம்பு அல்ல என்கிறது அறிவியல். எனவே இனிமேல் மண்ணுளி புழு என்றழைப்போம்.

இந்த மண்ணுளி மிகுந்த கூச்ச சுபாவம் மற்றும் பயந்த சுபாவம் கொண்டதாகும். இந்த பாம்பினால் மரணம் நிகழ்ந்ததாக இதுவரை எந்த பதிவும் இல்லை.

திடீரென இந்த பாம்புகளை லட்சக் கணக்கில் விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது?.

இந்தக் கேள்விக்கான பதில் எங்கும் கிடைக்காது.  ஏனெனில் இதற்கான உண்மையான பதில் திட்டமிட்டு மறைக்கப் படுகிறது என்பது தான் உண்மை. 

மண்ணுளியின் உடம்பில் உள்ள வெள்ளை அணுக்கள் மனிதருக்கு பயன்படும், கேன்சர், எச்.ஐ.விக்கு மருந்தாகப் பயன்படும் என்பவை அனைத்தும் கட்டுக் கதையே.

இந்தியாவின், குறிப்பாக தமிழர்களின் அடையாளமான இயற்கை விவசாயத்தை அழிப்பு முயற்சியான ஒரு அறிவியல் யுத்தம் (BIO WAR)  என்பதுதான் உண்மை.

மண்ணை உண்டு மண்ணிலேயே கழிவு செய்யும் மண்ணுளி புழு ஒரு இயற்கை உர உற்பத்திப் தொழிற்சாலை. இது இடும் எச்சம் வீரியமான இயற்கை உரம். ஒரு நிலத்தில் ஒரு மண்ணுளி புழு இருந்தால் அந்த இடத்தை சுற்றிலும் பல ஏக்கர்களுக்கு போதுமான இயற்கை உர சக்தியினை ஒரு மண்ணுளி புழுவால் உற்பத்தி செய்யப் படும்.

இந்த மண்ணுளி புழுக்கள் மணற்பாங்கான இடங்களையே விரும்பி வாழும். இவை மண்ணில் சுவாசிப்பதன் மூலம் மண்ணின் காற்று உள்புகும் திறனும் அதிகரித்து ஆக்சிஜனும் நைட்ரஜனும் இயற்கையாகவே  மண்ணுக்கு ஏற்றப் படுகிறது.

எந்த காலக் கட்டத்திலும் இயற்கை விவசாயம் தழைத்தோங்கி நிற்க காரணம் என்ன, இவர்களின் இயற்கை விவசாயத்தினை அழிப்பது எப்படி,  நமது செயற்கை உர சந்தையை இவர்களிடம் ஆதிக்கப் படுத்துவது எப்படி என்ற வியாபார புத்தியில் உதித்த உத்தி தான் மண்ணுளி புழு வியாபாரம்.

ஒருவனை ஏமாற்ற வேண்டுமெனில் அவனது ஆசையை தூண்ட வேண்டும் என்ற தந்திரம்தான். மண்ணுளி புழுவினை விலைக்கு வாங்குபவர்கள் சொல்லும் நிபந்தனைகள் தெரியுமா?.காயம் இருக்கக் கூடாது, 3 முதல் 5 கிலோ இருக்க வேண்டும்,  என்பார்கள். காயம் இருக்கக் கூடாது எனும் நிபந்தனையின் படி பார்த்தால், அவைகளை பிடிக்கும் முயற்சியில் பெரும்பாலான மண்ணுளிக்கள் காயப்பட்டு விடும். காயம்பட்ட மண்ணுளிகளை நிராகரித்து விடுவார்கள், நாமும் ஓரத்தில் தூக்கி எரித்து விடுவோம். இவைகளுக்கு தப்பிய மண்ணுளிக்கள்தான் எடை அளவுக்கு போகும். அங்கு அனைத்தும் நிராகரிக்கப் படும். ஏனெனில் அவர்கள் நிபந்தனையின் படி 3 முதல் 5 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் உண்மை என்னவெனில் இந்த மண்ணுளி புழுக்கள் சராசரியாக 1 கிலோ அல்லது 1 1/2 கிலோ அளவு தான் இருக்கும். அப்படியான சூழ்நிலைகளில் எடை குறைவாக உள்ளது. அடைத்து வைத்து வளர்த்து வாருங்கள் என்பார்கள். நம்ம மக்கள் அதனை ஒரு தொட்டியிலோ அல்லது ட்ரம்மிலோ போட்டு அடைத்து வைத்து அதன் இயல்பான அசைவுகளை தடுத்து விடுகிறோம்.

இதன் விளைவு!
மண்ணுளி புழு மண்னுக்கு அளிக்கும் இயற்கை உரம் தடுத்து நிறுத்தப் படுகிறது. முன்னர் சொன்னது போல பயந்த சுபாவம் கொண்ட இந்த மண்ணுளி புழுக்கள் அடைத்து வைக்கப் பட்ட தொட்டியில் இரண்டு அல்லது மூன்று தினங்களில் இறந்து போகும்.

இவ்வாறாக நம் மக்களுக்கு தூண்டப் பட்ட ஆசையில் உழவர்களின் நண்பனான மண்ணுளிக்கள் தற்போது பெரும்பாலும் அழிக்கப்பட்டு வருகின்றன.

விளைவு:
இயற்கை விவசாயம் அழிவுப் பாதையில் நாம் செயற்கை உரத்தினைத் தேடும் நிர்பந்தம்.

இப்போது முதல் பாராவினை திரும்ப படியுங்கள். நம் முன்னோர்களின் ஞானம் புரியும்.

மண்ணுளி பாம்பை திருடி தேசத்துக்கு துரோகம் செய்பவனை இனி நசுக்கி விடுங்கள்.

Tuesday 15 August 2017

தினம் தினம் மோடியின் வளர்ச்சியை கண்டு சட்டையை கிழித்து பைத்தியமாக அலையட்டும்

என்ன.. சித்ரகுப்தா இந்த மானிடன் உயிரை நம்மால் ஏன் எடுக்க இயலாது என்று கூறுகிறாய்?

இவனிடம் ஆதார் அட்டை  இல்லை மகாபிரபு?

அதனால் என்ன சித்ரகுப்தா?

ஆதார் எண் இல்லாததால் இவன் இறந்ததாக பூலோகத்தி்ல் ஒப்புகொள்ள மாட்டார்கள்..

என்ன கொடுமை
எமன்- என்ன சித்திரகுப்தா இந்தியாவில் இறந்தவர்களை கணக்கெடுப்பதற்கு ஆதார் கேட்கிறார்களாமே .

சித்திரகுப்தன் - ஆம் மன்னா நாம் இங்கே கணக்கு நோட்டு புத்தங்கள் வைத்து இருப்பது இந்தியாவிலும் வைக்கிறார்கள் மன்னா.

எமன்- நல்ல திட்டம் தானே .பிறகு எதற்கு சில கூமுட்டைகள் எதிர்க்கிறார்கள்.

சித்திரகுப்தன்-அதுவா மன்னா இதற்கு முன் இறந்தவங்க பேர சொல்லி கள்ள ஓட்டு போட்டவன்,ஏழைகளுக்கு போக வேண்டிய ரேசன் பொருட்களை திருடி தின்னு வயிறு வளர்த்தவன் ,அரசாங்க பணத்தை ஏழைகள் பெயரில் ஆட்டைய போட்டவன் எல்லாருக்கும் இந்த மோடி வந்து ஆப்பு வைத்து விட்டார் மன்னா.அதனால தான் இந்த கூமுட்டைகள் தங்கள் இவ்வளவு நாள் செய்து வந்த திருட்டு தொழில் முடிவுக்கு வந்த காரணத்தால் தினமும் மோடியை பற்றி பொய்யையும் ,புரட்டையும் வாட்ச்அப்பிலும் முகநூலிலும் பரப்பி கொண்டு இருக்கின்றனர்
.
எமன்- ஓ அப்படியா இந்த கூமுட்டைகள் திருந்த வாய்ப்பு இல்லை யா ?

சித்திரகுப்தன்- இவர்கள் திருந்த வாய்ப்பு இல்லை இவர்களுக்கு ஒரு வித மனநோய் வந்து முத்தி விட்டது. ஆனால் இவர்களது வாரிசுகளுக்கு புரியும் மோடியை பற்றி.

எமன்- சித்திரகுப்தா மோடி போன்ற நல்ல தலைவர்கள் இந்தியாவில் பிறந்து நிறைய வருடங்கள் ஆகி விட்டது. அதனால் அவருக்கு நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் இந்தியாவிற்கு நன்மை செய்யுமாறு ஆயுளையை நீட்டித்து விடு.

சித்திரகுப்தன் - அப்ப இந்த கூமுட்டைகளை என்ன செய்வது

எமன்- அவர்களுக்கும் ஆயுளை நீட்டித்து விடு.தினம் தினம் மோடியின் வளர்ச்சியை கண்டு சட்டையை கிழித்து பைத்தியமாக அலையட்டும்

.

ரசம் என்னும் சூப்பர் திரவம் பற்றி ஒரு அலசல்.


> >
> >
> > ரசம் என்னும்
> > சூப்பர் திரவம் பற்றி
> > ஒரு அலசல் { சமையலறை
> > }
> >
> > சித்த
> > வைத்திய
> > முறைப்படி நம் உணவில்
> > தினசரி துணை உணவுப்
> > பொருட்களாக வெள்ளைப்
> > பூண்டு, பெருங்காயம்,
> > மிளகு, சீரகம்,
> > புதினாக்கீரை, கறி
> > வேப்பிலை,
> > கொத்துமல்லிக் கீரை,
> > கடுகு, இஞ்சி முதலியன
> > சேர வேண்டும்.
> >
> >
> > இந்த
> > ஒன்பது
> > பொருட்களும்
> > ஆங்காங்கே நம் உணவில்
> > சேருகிறது என்றாலும்,
> > ஒட்டு மொத்தமாகச்
> > சேர்வது
> > ரசத்தில்தான்.
> >
> > புளிரசம்,
> > எலுமிச்சை
> > ரசம், மிளகு ரசம்,
> > அன்னாசிப் பழரசம்,
> > கொத்துமல்லி ரசம்
> > என்று பலவிதமான
> > சுவைகளின் ரசத்தைத்
> > தயாரித்தாலும் இந்தப்
> > பொருட்கள்
> > பெரும்பாலும் தவறாமல்
> > இடம்
> > பெற்றுவிடும்.
> >
> > பல நோய்களைக்
> > குணமாக்கும் மாற்று
> > மருந்து (Antidote) தான் இந்த
> > ரசம்.
> >
> > வைட்டமின்
> > குறைபாடுகளையும்
> > தாது உப்புக்
> > குறைபாடுகளையும் இது
> > போக்கிவிடுகிறது.
> >
> > அயல்
> > நாட்டினர்
> > உணவு முறையில்
> > சூப்புக்கு முதலிடம்
> > கொடுத்துள்ளனர்.
> >
> > இது,
> > ரசத்தின்
> > மறுவடிவமே.
> >
> > ரசமோ,
> > சூப்போ
> > எது சாப்பிட்டாலும்
> > பசியின்மை, செரியாமை,
> > வயிற்று உப்புசம்,
> > சோர்வு, வாய்வு,
> > ருசியின்மை,
> > பித்தம் முதலியன உடனே
> > பறந்து
> > போய்விடும்.
> >
> > சித்த
> > வைத்தியப்படி
> > உணவே மருந்தாகவும்,
> > மருந்தே உணவாகவும்
> > இந்தியர்கள்
> > பின்பற்றுவது
> > ரசத்தைப் பொறுத்தவரை
> > 100 சதவிகிதம்
> > பொருந்தும்.
> >
> > ரசத்தில்
> > போடப்படும்
> > சீரகம், வயிற்று
> > உப்புசம், தொண்டைக்
> > குழாயில் உள்ள சளி,
> > கண்களில் ஏற்படும்
> > காட்ராக்ட்
> > கோளாறு, ஆஸ்துமா
> > முதலியவற்றைக்
> > குணப்படுத்துகிறது.
> >
> > ரசத்தில்
> > சேரும்
> > பெருங்காயம் வயிறு
> > சம்பந்தமான கோளாறுகள்
> > அனைத்தையும்
> > குணப்படுத்துகிறது.
> >
> > வலிப்பு
> > நோய்
> > வராமல்
> > தடுக்கிறது.
> >
> > மூளைக்கும்
> > உடலுக்கும் அமைதியைக்
> > கொடுக்கிறது.
> >
> > நரம்புகள்
> > சாந்தடைவதால்
> > நோய்கள்
> > குணமாகின்றன.
> >
> > அபார்ஷன்
> > ஆகாமல்
> > தவிர்த்துவிடுகிறது.
> >
> >
> > புரதமும்
> > மாவுச்சத்தும்
> > பெருங்காயத்தில் தக்க
> > அளவில் உள்ளது.
> >
> > கொத்துமல்லிக்கீரை
> > ரசத்தில் சேர்வதால்,
> > காய்ச்சல் தணிந்து
> > சிறுநீர் நன்கு
> > வெளியேறுகிறது.
> >
> > உடல்
> > சூடு,
> > நாக்கு வறட்சி முதலியன
> > அகலுகின்றன.
> >
> > கண்களின்
> > பார்வைத்
> > திறன்
> > அதிகரிக்கிறது.
> >
> > மாதவிலக்கு
> > சம்பந்தமான கோளாறுகள்
> > வராமல் தடுக்கிறது.
> >
> >
> > வயிற்றிற்கு
> > உறுதி தருவதுடன் குடல்
> > உறுப்புகள்
> > சிறப்பாகச்
> > செயல்படவும்,
> > செரிமானக்
> > கோளாறுகளைத்
> > தடுக்கவும்,
> > நீரிழிவு, சிறுநீரக்
> > கோளாறு முதலியவை
> > இருந்தால் அவற்றைக்
> > குணப்படுத்தவும்,
> > ரசத்தில்
> > சேரும் கறிவேப்பிலை
> > உதவுகிறது.
> >
> > கறிவேப்பிலையை
> > ஒதுக்காமல் மென்று
> > தின்பது நல்லது.
> >
> > கறி
> > வேப்பிலையால்
> > ரசம் மூலிகை டானிக்காக
> > உயர்ந்து
> > நிற்கிறது.
> >
> > ரசத்தில்
> > சேரும்
> > வெள்ளைப்பூண்டு,
> > ஆஸ்துமா, இதயக் கோளாறு,
> > குடல் பூச்சிகள்,
> > சிறுநீரகத்தில் உள்ள
> > கற்கள்,
> > கல்லீரல் கோளாறுகள்
> > முதலியவற்றைக்
> > கட்டுப்
> > படுத்துகிறது.
> >
> > இதயத்திற்கு
> > இரத்தத்தைக் கொண்டு
> > செல்லும் குழாய்கள்
> > தடித்துப் போகாமல்
> > பார்த்துக்
> > கொள்கிறது.
> >
> > தக்க
> > அளவில்
> > புரதமும் நோய்களைக்
> > குணமாக்கும் ‘பி’
> > வைட்டமின்களும், ‘சி’
> > வைட்டமின் களும்
> > பூண்டில்
> > இருப்பதால் நுரையீரல்
> > கோளாறு, காய்ச்சல்
> > போன்றவையும் எட்டிப்
> > பார்க்காது.
> >
> > தலைவலி,
> > தொடர்ந்து
> > இருமல், மூக்கு
> > ஒழுகுதல் போன்றவை
> > ரசத்தில் சேரும்
> > இஞ்சியால் எளிதில்
> > குணம் பெறுகின்றன.
> >
> > மூச்சுக்குழல்,
> > ஆஸ்துமா, வறட்டு
> > இருமல், நுரையீரலில்
> > காசம்
> > முதலியவற்றையும்
> > குணமாக்கி,
> > குளிர்காய்ச்சலையும்
> > தடுக்கிறது இஞ்சி.
> >
> >
> > ஜலதோஷம்,
> > காய்ச்சல்,
> > நரம்புத் தளர்ச்சி,
> > மலட்டுத்தன்மை
> > முதலியவற்றை ரசத்தில்
> > சேரும் மிளகு, சக்தி
> > வாய்ந்த
> > உணவு மருந்தாக இருந்து
> > குணப்படுத்துகிறது.
> >
> > தசைவலியும்,
> > மூட்டுவலியும்
> > குணமாகின்றன. வாதம்,
> > பித்தம், கபம் வராமல்
> > தடுக்கிறது.
> >
> > ரசத்தில்
> > சேரும்
> > கடுகு உடம்பில்
> > குடைச்சல், தலை சுற்றல்
> > முதலியவற்றைத்
> > தடுக்கிறது.
> >
> > வயிறு
> > சம்பந்தமான
> > கோளாறுகளை நீக்கி
> > வயிற்றைச் சுத்தமாக
> > வைத்திருக்க
> > உதவுகிறது.
> >
> > ரசத்தில்
> > புளியின்
> > அளவை மட்டும் மிகக்
> > குறைவாகச்
> > சேருங்கள்.
> >
> > மழைக்காலத்தில்
> > உடல் நலத்தைக் காத்து
> > முன்கூட்டியே
> > நோய்களைத்
> > தடுத்துவிடுவதால்,
> > ரசத்தின் உதவியால்
> > ஜலதோஷம், ப்ளூ
> > காய்ச்சல் இன்றி
> > வாழலாம்.
> >
> > வெயில்
> > காலத்தில்
> > நாக்கு வறட்சி, அதிகக்
> > காப்பி, டீ
> > முதலியவற்றால் வரும்
> > பித்தம் முதலிய
> > வற்றையும், தினசரி
> > உணவில் சேரும் ரசம்
> > உணவு மருந்தாகக்
> > குணப்படுத்தும்.
> >
> > எனவே,
> > ரசம்
> > என்னும் சூப்பர்
> > திரவத்தைக் கூடியவரை
> > தினமும் உணவில்
> > சேர்த்துக்
> > கொள்ளுங்கள்.

தோற்று போனால் வெற்றி கிடைக்குமா ?

✌ *4 வயதில்*, தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !

✌ *8 வயதில்*, தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !

✌ *12 வயதில்*, நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !

✌ *18 வயதில்*, வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !

✌ *22 வயதில்*, பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !

✌ *25 வயதில்*, நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !

✌ *30 வயதில்*, தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !

✌ *35 வயதில்*, போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !

✌ *45 வயதில்*, இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !

✌ *50 வயதில்*, தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !

✌ *55 வயதில்*, நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !

✌ *60 வயதில்*, ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !

✌ *65 வயதில்*, நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

✌ *70 வயதில்*, மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !

✌ *75 வயதில்*, பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !

✌ *80 வயதிற்கு மேல்* மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !

   

தோற்று போனால்
வெற்றி கிடைக்குமா ?

✌ *அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..*

✌ *அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..*

✌ *துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..*

✌ *பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..*

✌ *சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..*

✌ *நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..*

✌ *ஆகவே தோற்று போ,*

தோற்று போனால் வெற்றி கிடைக்கும்

🙏 அன்புடன் வாழுங்கள்.மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்..நன்றி.. 🙏

Monday 14 August 2017

சும்மா வா வந்தது சுதந்திரம்

தமிழக சுதந்திர போராட்ட வீரர்களுக்கும் வீரவணக்கம்

ஜெய் ஹிந்த் செண்பகராமன்
திருப்பூர் குமரன்
தீரன் சின்னமலை
பூலித்தேவன்
வீர அழகு முத்துக்கோன்
வீரபாண்டிய கட்டபொம்மன்
வெள்ளையத்தேவன்
ஒண்டி வீரர்
சுந்தரலிங்கனார்
மருது சகோதரர்கள்
நீலகண்ட பிரம்மச்சாரி
வ.வே.சு.ஐயர்
வீர வாஞ்சிநாதன்
பாரதியார்
சுப்பிரமணிய சிவா
வ.உ.சிதம்பரனார்
வேலு நாச்சியார்
குயிலி
தில்லையாடி வள்ளியம்மை
அஞ்சலை அம்மாள்
மேலும் இந்த வேள்வியில் தன்னை இணைத்துக் கொண்ட
தியாக தீபங்கள்
அனைவருக்கும்
வீர வணக்கம்
வீர வணக்கம்
சும்மா வரவில்லை
சுதந்திரம்

சக்தியை இழப்பது சிற்றின்பம். சக்தியாய் மாறுவது பேரின்பம்

சித்தர் வாக்கு.....

இன்பத்தில் என்னய்யா சிற்றின்பம் ...பேரின்பம்...!!

படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம்.

படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்.

படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்.

படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்.

படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.

படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.

என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.

இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.

நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.

நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.

அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.

அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.

செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.

செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.

செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.

செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.

புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.

அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.

இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது சிற்றின்பம்.

வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.

நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.

நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.

உடலோடு மனதை தொடர்புப்படுத்துவது சிற்றின்பம்.

உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.

இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.

துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.

எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.

எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.

பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.

மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.

பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.

பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.

சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.

எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.

பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.

தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.

அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்.

அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.

அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.

அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.

அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.

அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.

பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.

பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.

முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.

முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.

இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்.

கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.

உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.

உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.

புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.

புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.

மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்.

மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.

மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.

மரணத்தையும் வெல்வது பேரின்பம்.

மனமாய் இருந்தால் சிற்றின்பம்.

மனதைக் கடந்தால் பேரின்பம்.

வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.

எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.

பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்.

மொத்தமாய் கண்டால் பேரின்பம்.

அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்.

அகங்காரம் துறந்தால் பேரின்பம்.

தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்.

அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்

துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்.

துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.

ஜீவராசிகளால் தரமுடிந்தது சிற்றின்பம்.

இறைவனால் தரப்படுவது பேரின்பம்.

உலகைப் பற்றினால் சிற்றின்பம்.

இறைவனைப் பற்றினால் பேரின்பம்.

பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்.

தன் நலம் கொள்ளாதது பேரின்பம்.

இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்.

இன்பமான இன்பமே பேரின்பம்.

அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம்.

ஞானம் விரும்புவது பேரின்பம்.

பெற்று மகிழ்வது சிற்றின்பம்.

கொடுத்து மகிழ்வது பேரின்பம்.

சக்தியை இழப்பது சிற்றின்பம்.

சக்தியாய் மாறுவது பேரின்பம்.

பற்றுக் கொள்வது சிற்றின்பம்.

பற்றற்று இருப்பது பேரின்பம்.

மாறுவது, தாவுவது சிற்றின்பம்.

மாறாதது நிலைத்தது பேரின்பம்.

நிலையற்றது சிற்றின்பம்.

நிரந்தரமானது பேரின்பம்.

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing