Saturday 23 June 2018

உங்களுக்கு 50 - 55 வயது விட்டதா?

உங்களுக்கு 50 - 55 வயது விட்டதா?.
அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!...

உடனே மனது ஏற்காது. 
ஆனால் உண்மை.

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப் போவது இல்லை.
போகும் போது
எதையும் எடுத்துக் கொண்டும் போகப் போவது இல்லை.
ஆகவே  சிக்கனமாக
இருக்காதீர்கள்.

செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.
உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!.
எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்!.
நாம் இறந்த பிறகு, நமது
உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ
உங்களுக்குத் தெரியப் போவதில்லை.

நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்து விடும்.
உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டு விடும்.
உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின்
வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும்.

அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியும் இல்லை!
சதா...சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்.
பணத்தை விட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்.

பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது!
ஆயிரம் ஏக்கர் விளை நிலம் இருந்தாலும், நாள் ஒன்றிற்கு
அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ணவே முடியாது.

அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க 10க்கு பத்து இடமே போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதும் என்று நிம்மதியாக இருங்கள்!.
பிள்ளைகளுக்கு வாழ்கையை கற்றுக் கொடுப்பதே உங்களது கடமை.
ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?.
ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.

பணம், புகழ், சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். இறைவன் தருவதை ஏற்றுக் கொள்வதே சிறப்பை தரும்.
நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும்
இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!

உங்கள் வீட்டில் யாரும் நீங்கள் சொல்வது போலவே அச்சு பிசகாமல் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அவர்கள் இனி அதை உங்களிடம் விரும்பவும் மாட்டார்கள்.
ஓரிரு முறை சொல்லி விட்டு ஒதுங்கி விடுங்கள்.
தொடர்ந்தால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.

நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி,அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
  
மன மகிழ்ச்சிதான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை !

உற்சாகத்தோடு இருக்கும் போது நோய் நொடிகள் குணமாகும். அனுதினமும் உற்சாகத்தோடு இருப்பவர்களை நோய் நொடிகள் அண்டாது.
நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகள் உங்களை
வாழ வைக்கும்!!

அதற்கு மேல் என்ன வேண்டும் சொல்லுங்கள்?.
எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை  நல்லவைகளாகவே இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
எஞ்சி வரும் நாட்கள் நம் மண் பயனுற வாழ நல் வாழ்த்துக்கள்!!!!!
உங்கள் வீடு தானே இயங்கி நல்லவை நடக்கும்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing