Friday 15 June 2018

#இந்துக்கள் #பிறந்தநாள் எப்படி கொண்டாடுவது?


மேலைநாடுகளில்
கிருஸ்துவர்கள்
கேக் வெட்டி பிறந்தநாள்
கொண்டாடுவது போல இந்துக்கள் பிறந்தநாள் கொண்டாடுவது  தவறு! !!

இந்துக்களில்
இந்து சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை உள்ளவர்களா நீங்கள்?
உங்கள்
அன்பான குழந்தைக்கு
ஆசை ஆசையாய்
வைத்த  பெயரை
அழகாக ஒரு இடத்தில்  
எழுதி வைத்துவிட்டு
அல்லது
குழந்தையின் புகைப்படத்தை
வரைந்து் வைத்துவிட்டு 
பின்னர் ஒரு நல்ல நாளில் 
அதை உடைக்கவோ
கிழிக்கவோ அழிக்கவோ
முடிவு செய்வீர்களா?

அப்படி பொறிக்கப்பட்டிருந்த
பெயரோ புகைப்படமோ
சிதைந்து விட்டால
உங்கள் மனதில் எவ்வளவு
வேதனை வரும்.
வரும்மா வராதா?

அப்புறம்  
ஒரு நல்ல நாளில்
உங்கள் வீட்டில் ஏற்றி வைத்த
தீபத்தை உங்கள் குழந்தை
புரியாமல்  வாயால் ஊதி
அனைத்துவிட்டால் 
அதை சகுன தடையாக
நினைப்பீர்களா?
நினைக்க மாட்டீர்களா?

ஆனால்
நம் நம்பிக்கைகளை எல்லாம்
தவிடு பொடியாக்கி
பிறந்தநாள்
என்ற பெயரில்
கூத்தடிக்கின்றோம்மே
இது சரியா?

மெழுகுவர்த்தி
ஏற்றி அனைத்து
பிறந்தநாள்
கேக் வெட்டாதீர்கள்
ஏனெனில்
அது
நமது பாரம்பரிய
பழக்க வழக்கம் அல்ல.....

அதோடு அது
நம் இந்துக்களின் 
நல்ல நம்பிக்கைகளுக்கு
எதிரானது......
அது
அபசகுனமாகும்

அதைவிட அது
கேக்கில் இருக்கும் கலர்
மெழுகுவர்த்தி இவை
உடல் நலத்திற்கு கேடானது
கேன்சர் நோயை உண்டாக்கும்...

பிறந்தநாளில்
மெழுகுவர்த்தி ஏற்றுவது தவறு

தீபத்தை
வாயால் ஊதி
பிறந்தநாளில் அனைக்காதீர்கள். ..
அது பெரிய தவறு. ...

பிறந்தநாளை
சிறப்பாக விசேஷமாக
கொண்டாடிட

வாழை இலையில் பச்சரிசி மேல்
பித்தளை சொம்பில் நூல் சுற்றி
நீர் நிரப்பி மாவிலை
மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து
உருவாக்கப்பட்ட கும்பம் முன்
மஞ்சள் பிள்ளையார் பிடித்துவைத்து
அதன் முன்னதாக......
எத்தனையாவது
பிறந்தநாளோ
அத்தனை
நெய் தீபங்கள்
புது விளக்கில் ஏற்றுங்கள்....

ஆம்...
முதல் பிறந்தநாளுக்கு
ஒரு  புது விளக்கில்
தீபம் ஏற்ற சொல்லுங்க
இரண்டாவது பிறந்தநாளுக்கு
இன்னொரு புது விளக்கு வாங்கி
இரண்டு விளக்கில்
தீபம் ஏற்ற சொல்லுங்க...
இப்படியே வருடம் வருடம்
ஒரு புது விளக்கு
எத்தனையாவது பிறந்தநாளோ
அத்தனை விளக்குகளில்
தீபம்  ஏற்றி கொண்டாடுவோம்..

பிறந்தநாளில் விளக்குகளை படிப்படியாக
அடுக்கி வைத்து அழகுபடுத்தி
ஆன்மீக பரிசுத்தத்துடன் தீபம் ஏற்றி கொண்டாடுவோம்

எந்த ஒரு நல்ல காரியத்தையும் விளக்கை அணைத்து கொண்டாடுவது தமிழர் மரபல்ல
விளக்கை ஏற்றி கொண்டாடுபதே தமிழர் மரபு

ஏற்றிய தீபத்தை
நேரம் முடிந்ததும்
பூ அல்லது மஞ்சள் கொண்டு பெரியவர்கள்
அமர்த்த வேண்டும் ....
அது
நமக்கு நம்பிக்கையும்
நல் வாழ்வையும் தரும். ...   

ஒரு இந்து
தனது பிறந்தநாளை
அவர் பிறந்த தமிழ் மாதல் வரும் தனது பிறந்த  நட்சத்திரத்தின் வரும் நாளில் கொண்டாட வேண்டும்
 
பிறந்தநாள் என்பது ஆங்கில தேதியில் எடுத்து கொள்ள கூடாது. 
தமிழ் தேதியில் தான் பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.

பிறந்த நட்சத்திரத்தில் தான் ஆலயத்தில் அர்ச்சனை தங்கள் நட்சத்திர பெயரில் செய்வது மிகவும் சிறப்பாகும் .

மேலும் கவனிக்க வேண்டியது.
=========================
பிறந்தநாளன்று செய்யவேண்டியது செய்யக்கூடாதது ..

ஒருவர் பிறந்தநாளன்று செய்யவேண்டியவைகளையும் செய்யக்கூடாதவைகளையும் பார்ப்போம்.

ஒருவர் பிறந்த நாள் என்பது அவரது ஆயுளை இறைவன் மேலும் நீட்டித்து வழங்கும் நாளாகும். இறைவனின் நேரடி பார்வை அன்று நம்மீது இருக்கும். எனவே பிறந்தநாளை ஒருவர் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு இறையருளுக்கு பாத்திரமாகவேண்டும்.

பிறந்தநாளன்று ஒருவர் செய்யவேண்டியது என்ன ?

1) காலையில் சீக்கிரம் எழுந்து எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும்.

2) புத்தாடைகள் இருப்பின் அவற்றை பெரியோரிடம் தந்து குங்குமம் வைத்து வாங்கி அணியலாம். (ஆடைகளில் தோஷம் ஏதேனும் இருந்தால் குங்குமம் வைப்பது மூலம் அவை நீங்கிவிடும்).

3) பெற்றோர் மற்றும் மூத்தோரின் கால்களில் விழுந்து ஆசி பெறவேண்டும்.

4) அவர்கள் கையால் இனிப்புக்களை பெற்று அதை உண்ணவேண்டும்

5) குல தெய்வத்தின் கோவிலுக்கு செல்லவேண்டும்.

6) ஆலயத்தில் உங்கள் பெயர் ராசி நட்சத்திரப்படி அர்ச்சனை, அபிஷேக, ஆராதனைகள் செய்யவேண்டும்

7) வீட்டிலும் கோவில்களிலும் முடிந்த எண்ணிக்கையில் விளக்கேற்றவேண்டும்.

#8) ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திர தானம் உள்ளிட்ட தர்ம காரியங்கள் செய்யலாம்.

9) அன்று ஆயுஷ் ஹோமம் செய்வது நன்று.

10) கோ-பூஜை செய்வது சாலச் சிறந்தது. கோ-பூஜை செய்ய இயலாதவர்கள் பசுவுக்கு உணவளிக்கலாம்.

11) புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள விரும்பினாலோ அல்லது புதிய வகுப்பில் சேர விரும்பினாலோ அன்று அதை செய்யலாம்.

12) அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளலாம்.

13) புதிய சொத்துக்கள் வாங்கலாம்.

14) வாகனங்கள் வாங்கலாம்

15) புதுமனைப் புகு விழா (கிரஹப் பிரவேசம்) செய்யலாம்.

16) உபநயனம் செய்துகொள்ளலாம்

17) பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, நண்பர்களோ அளிக்கும் பரிசுகளை ஏற்றுக்கொள்ளலாம். நல்ல எண்ணத்துடன் எந்த வித எதிர்பார்ப்புமின்றி அந்த பரிசு கொடுக்கப்பட வேண்டும். ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

18) இராமாயண, மகாபாரத, இதிகாசங்களை படிக்கலாம். பக்தி நூல்களை, ஸ்தோத்திரங்களை படிக்கலாம்.
பரபரப்பான வாழ்க்கையில் உழல்பவர்கள் அன்றைக்கு அலுவலகத்திற்கு ஒரு நாளோ அறைநாளோ விடுப்பு எடுத்துக்கொண்டால் மேற்கூறியவைகளை பதட்டமின்றி செய்யமுடியும்.

பிறந்த நாளன்று செய்யக்கூடாதவை :

1) புதிய மருந்து உட்கொள்வது கூடாது.

2) திருமணம் செய்துகொள்வது கூடாது

3) சீமந்தம், வளைகாப்பு செய்யக்கூடாது

4) சாந்தி முஹூர்த்தம் வைத்துக்கொள்ளக்கூடாது

5) அசைவ உணவு சாப்பிடுவது அல்லது அசைவ உணவு விருந்தளிப்பது கூடாது.

6) கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றுதல், அதை வாயால் ஊதி அணைத்தல் கூடவே கூடாது. (அன்றைய நாளில் விளக்கேற்ற வேண்டுமே தவிர அணைக்கக் கூடாது.)

7) வம்பு தும்பு வழக்கு, வாதம், சண்டை ஆகியவற்றில் ஈடுபடுவதை அன்று நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

#8) முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் அன்று தங்களுக்கு கீழ் உள்ளவர்களை தண்டிக்கக் கூடாது. முடிந்தால் அவர்களை மன்னிக்கலாம்.

9) தங்களின் புதிய சொத்துக்கள், பரிசுகள், வருவாய் ஆகியவை குறித்து தம்பட்டம் அடித்துக்கொள்ளுதல் கூடவே கூடாது.

10, பிறந்தநாள் அன்று மது சூது என்று எந்த கெட்ட கேளிக்கைகளை தவிர்க்க வேண்டும்.

மொத்தத்தில் இறைவன் நம்முள் நுழையும் நாளான நம் பிறந்தநாளன்று கேளிக்கைகளை தவிர்த்துவிட்டு அன்றைய தினத்தை ஆத்ம சுத்திக்காக ஒதுக்கிடவேண்டும்.

இப்படி செய்தால் இறையருளுக்கு பரிபூரணமாக பாத்திரமாவதுடன் நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செலவத்தையும் நல்லோர் நட்பையும்
பெரிய புகழையும்  ஒருவர் பெறலாம்.
=============================
இனி வரும்  பிறந்தநாளில் இப்படி அனைவரும் கொண்டாட வாழ்த்துக்கள்
=============================
Via: சிவ சிவானி

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing