Monday 26 October 2015

கோவிந்தா !..என்ற வார்தையின் அர்த்தம் ?


1
கோ (பசு) + விந்தன் (காப்பவன்) = கோவிந்தன் !
2
கோ = உயிர்கள் & விந்தன் = காப்பாற்றுபவன்
3
கோவிந்தன் = நயமான வார்த்தையில் (கீதை) உரைத்தவன்
4
மேலும், கோவிந்தா என்ற சொல்லுக்கு :
போனது வராது என்று அர்த்தம். அதாவது
கோவிந்தா என நாம் சொல்லச் சொல்லச் சொல்ல
போன உயிர் திரும்ப வராது என்று அர்த்தம்.
( மறு பிறவி இல்லாத பரமபதப் பிராப்தி )

5
கோவிந்தாவுக்கு இன்னொரு 
பொருளும் உண்டு ! 
கோ இந்தா என்பர் 
கோ என்றால் பசு 
இந்தா என்றால் வாங்கிக் கொள் 
என்று பொருளும் உண்டு. 
6
கோவிந்தா.. கோவிந்தா என 
சொல்லச் சொல்ல 
பசுதானம் செய்த புண்ணியம் 
கிடைத்துக் கொண்டே இருக்கும் 
என்று சொல்கிறார்கள்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing